• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 18 நவம்பர் 2024

ஆண்டவர் உனக்காக சிறந்த திட்டங்களை வைத்திருக்கிறார்! 😄

வெளியீட்டு தேதி 18 நவம்பர் 2024

இன்று, எரேமியா 29:11-ல் உள்ள "அறிவேன்" என்ற வினைச்சொல்லைப் பற்றி சற்று தியானிக்கும்படி நேரம் ஒதுக்க உன்னை அழைக்கிறேன்: "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11

அன்பரே, உன் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் உன் எதிர்காலத்தைப் பற்றி ஆண்டவருக்கு நன்றாகத் தெரியும்.

  • உன் கடந்த காலத்தில்: நீ எப்படிப்பட்ட சோதனைகளைச் சந்தித்திருந்தாலும் சரி, ஆண்டவர் உனக்கு ஆறுதல் அளித்து உன்னை மீட்டெடுக்க விரும்புகிறார். அவர் உன்னைப் பற்றிய அனைத்தையும் அறிந்திருக்கிறார். ஆண்டவர் உன் இதயத்தை சீர்தூக்கிப்பார்த்து, உன் எண்ணங்களை ஆராய்பவராய் இருக்கிறார்.  உன்னைத் துன்பப்படுத்துவதும் மற்றும் வருத்தப்படுத்துவதும் எது என்பதை அவர் அறிவார். கடந்துசென்ற நாட்களைக் குறித்து அவர் உன்னிடத்தில் கூறுவது இதுதான்: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின." (2 கொரிந்தியர் 5:17) ஆண்டவர் உன்னை முன்னோக்கிச் செல்ல ஊக்குவிக்கிறார்! 
  • உன் நிகழ்காலத்தை, சங்கீதக்காரன் சொன்னதுபோல, கர்த்தரும் முழுமையாக அறிந்திருக்கிறார்: “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 139:1-6) நீ கவலைப்படத் தொடங்கியவுடன், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்!” என்று அவரிடம் சொல்லிவிடு.
  • நீ அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும் ஆண்டவருக்கு நன்றாகத் தெரியும். அவர் உன் போராட்டங்களைப் பார்க்கிறார். அவர் உன் கேள்விகளைக் கவனிக்கிறார்.  உன் கவலைகளை அவர் புரிந்துகொள்கிறார்.
  • உன் எதிர்காலத்துக்காக, அவர் உனக்காக வைத்திருக்கும் அனைத்து திட்டங்களையும் அவர் அறிந்திருக்கிறார், மேலும் நீ பிறப்பதற்கு முன்பே அவற்றை உனக்காக வைத்திருந்தார்.

ஆம், அன்பரே, ஆண்டவர் உன்னைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்திருக்கிறார், மற்றும் முழுமையாக அறிந்திருக்கிறார், குறிப்பாக, அவர் உன்னை நேசிக்கிறார் என்பதை முற்றிலும் விசுவாசி. நீ விசேஷித்த நபர், உன் வாழ்க்கைக்கான அவருடைய திட்டம் மிகச்சிறந்தது.

உன் கடந்தகாலமோ அல்லது நிகழ்காலமோ உன் எதிர்காலத்திற்கான பார்வையை மறைத்தாலும், ஆண்டவர் உன் எதிர்காலத்தை நன்கு அறிவார்!

ஆண்டவரது சமூகத்தில் இது ஒரு அழகான நாளாக அமையட்டும்.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.