அனுதினமும் ஒரு அதிசயம்

பதிவுசெய்தால், காலைதோறும் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்று அழைக்கப்படும் எங்களது ஊக்கமளிக்கும் மின்னஞ்சலை மகிழ்ச்சியோடு உங்களுக்கு அனுப்புவோம்!

மறக்கவேண்டாம்: நீங்கள் ஒரு அதிசயம்!

சாட்சிகள் Mariyal

"ரொம்ப நன்றி அய்யா நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன் என்ன பண்றதுனு நீங்க அனுப்பிய வார்த்தை என்னை மிகவும் தேற்றிவிட்டது. என் அப்பா இயேசுவே எனக்கு உங்கள் மூளையமா பேசுகின்றாரு இனி தைரியமா நான் இந்த வேலையை தேடங்குவேன் நன்றி அய்யா 🙏🙏🙏🙏 "

சாட்சிகள் Selin

"என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது என் அம்மா என்னை அழைப்பது போல் இருக்கிறது நன்றி "

சாட்சிகள் Sahayaraj

உங்கள் பதிவு மூலம் கர்த்தர் தினமும் என்னை பலப்படுத்துகிறார், நான் யார் என்று உணர வைக்கிறார், நன்றி பிரதர். உங்கள் ஊழியம் உலகம் முழுதும் பரவ வளர ஜெபிக்கிறேன்

சாட்சிகள் Mary

"அனுதினமும் அதிசயம் என்ற வார்த்தை மூலம் நானும் என் வாழ்க்கை நிறைய மாற்றங்கள் கொண்டுள்ளேன் நன்றி 🙏🙏🙏 "

சாட்சிகள் Sakthi

நானும் எவ்வளவோ மேகஸின் வாஸ்து இருக்கேன் ஆர்ட்டிக்கள் எல்லாம் வாஸ்து இருக்கேன் பட் காலையிலேயேவும் இப்படி ஒரு என்கரேஜ்மென்ட் ஆனா வார்த்தைகள நான் வாசிக்கும் போது அந்த நாள் முழுவதும் மிகவும் புத்துணர்வா இருக்கு எனக்கு

சாட்சிகள் Jayakumar

இப்படி ஒரு ஜெபம் எறெடுப்பது இது முதல் முறை தான். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிறப்பு எடுப்பதை உணர முடிகிறது. ஆண்டவருடன் நல்ல இணைப்பு உருவாக உதவியாய் அமைகிறது. ஆண்டவருடைய உதவி மற்றும் மன்னிப்பு தேவை என்பதை விசுவாசம் செய்கிறேன். அனுதினமும் ஒரு அதிசயம் தான் நன்றி நன்றி நன்றி ஆமென்.

சாட்சிகள் Tamil Selvi

"Sis.praise the lord கொஞ்ச நாளா உடம்பு சரியில்லை நீங்கள் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி உங்க மின்னஞ்சல் என்னை ஆண்டவரின் பாதத்தில் அமர வைக்கிறது so thanking you sis Sis உங்க மின்னஞ்சல் எவ்வளவு ஆழமான சத்தியம் நன்றி 🙏🙏🙏💐💐💐💐🍫🍫🍫"

அனுதினமும் ஒரு அதிசயம்

வேதாகமம், உயிருள்ள தேவனைப் பற்றி பேசும் பல அதிசயங்களால் நிறைந்துள்ளது. சாத்தியமற்றதை, சாத்தியமாக்கும் தேவன் அவரே! அவர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறவர். அவர் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார்! "அனுதினமும் ஒரு அதிசயம்" உங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவும் ஆண்டவருடைய பிரசன்னத்தையும் வல்லமையையும் நீங்கள் அனுபவிக்கவும் உங்களுக்கு உதவும்.

செயலி

நீங்கள் மின்னஞ்சல் பயன்படுத்துபவர் இல்லையா? எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்து அனுதினமும் ஒரு ஊக்கமளிக்கும் செய்தியை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ளவும். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிடைக்கும். கீழ்கண்ட விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்.

எழுத்தாளர்கள்

கேம்ரன் மற்றும் ஜெனியாகிய நாங்கள் இந்தியாவுக்கான 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலின் ஆசிரியர்களாக இருக்கிறோம். 2002ஆம் ஆண்டு கேம்ரனாகிய நான் ஸ்தாபித்த யெஷுவா ஊழியங்கள் மூலமாகவும் மற்றும் நான் எழுதிய "Yeshu Tera Naam Sabse Uncha Hai", "Hum Gaye Hosanna", "Gao Hallelujah", "Le Chal Muhje" மற்றும் "Tumsa" போன்ற பிரபலமான ஹிந்தி ஆராதனை பாடல்கள் மூலமாகவும் மக்கள் எங்களை அறிந்திருக்கலாம். கேம்ரனாகிய நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆராதனைக் குழு தலைவராகவும் பாடலாசிரியராகவும் இருந்து வருகிறேன். அதே நேரத்தில், முன்பு வழக்கறிஞராக இருந்துகொண்டே, ஊழியம் செய்து கொண்டிருந்த ஜெனியை நான் திருமணம் செய்துகொண்ட பிறகு, ஜெனியும் யெஷுவா ஊழியத்தில் இணைந்தார். நாங்கள் இருவரும் இணைந்து யெஷுவா ஊழியத்தின் மூலம் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம்.

எங்கள் பாடல் குழுவினருடன் இணைந்து, நாங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து, இசை மூலம் நற்செய்தியைப் பகிர்ந்துவருகிறோம். நாங்கள் வெளிநாட்டுக்குப் போகும் முன்பு இந்தியாவில்தான் வசித்துவந்தோம், இந்தியாவில் வசிக்கையில், கேம்ரனாகிய நான் ஆராதனை குழுவின் தலைவராக இருந்து ஊழியம் செய்து வந்தேன். ஆனால் நாங்கள் இப்போது - ஜெனியின் தாயக தேசத்தில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அயல்நாட்டில் வாழ்ந்து வந்தாலும், எங்கள் மனம் இன்னும் இந்தியா மீதே பற்றுடன் உள்ளது.

2020 ஆம் ஆண்டில், 10 மாதமே நிரம்பிய எங்கள் மகன் ஜாக், மூளைத் தொற்று நோயால் கடுமையாக வியாதிப்பட்டபோது,​எங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டோம். இன்றுவரை, அவன் ஊனமுற்றவனாகவே இருக்கிறான்; மேலும் முழுமையாக குணமடையும்படி ஒரு அதிசயத்திற்காக நாங்கள் தொடர்ந்து ஜெபிக்கிறோம். இந்த வலிமிகுந்த பயணத்தின் மூலம், ஒவ்வொரு சூழ்நிலையிலும் - நற்செய்தியை சுமந்துகொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்தாலும், எங்கள் மகனின் மருத்துவமனை படுக்கையில் அழுதாலும், மேடையில் பாடி ஆண்டவரைத் துதித்தாலும், அல்லது தூக்கமில்லாத இரவுகளைக் கடந்து சென்றாலும், நாங்கள் இயேசு கிறிஸ்துவை துதிக்க கற்றுக்கொண்டோம். நாம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் சரி, துக்கத்தில் இருந்தாலும் சரி, நம்மிடம் நெருங்கி வரும் ஆண்டவரால் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். மற்றவர்களின் உதவி இல்லாமல், எங்களால் தனியாக இந்த வழியில் நடந்திருக்க முடியாது, இப்போது, உன் விசுவாசப் பயணத்தில் உன்னுடன் சேர்ந்து, உனக்கு தினசரி ஊக்கத்தை அனுப்புவதன் மூலம், நீ இயேசு கிறிஸ்துவின் மீது உன் விசுவாசத்தை வைக்க உனக்கு உதவ விரும்புகிறோம்!

இந்தியாவில் ஒரு போதகரின் மகனாக வளர்ந்த நான் (கேம்ரன்), ஊழியத்தின் நிமித்தம் என் பெற்றோர் சரீரப்பிரகாரமாகவும் மனதளவிலும் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளானபோதிலும், அவர்கள் ஆண்டவருக்காக வைராக்கியமாய் நின்றதையும், அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன். துன்புறுத்தலால் கட்டுப்படுத்த முடியாதபடி உலகிற்கு நற்செய்தியைக் கொண்டுவரும் ஒரு ஊழியத்தை நிலைநாட்டுவதே எனது நோக்கமாக இருந்தது - அதுதான் இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது! யெஷுவா ஊழியத்தின் பாடல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்குச் சென்றடைந்துள்ளன. இணையதளம் மூலம் சுவிசேஷத்தைப் பரப்பும் jesus.net ஊழியத்துடன் இது சரியாக ஒத்துப்போகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவிற்கு அதிசயத்தை கொண்டு வரும் பணியில் நாங்கள் பங்குதாரர்களாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்!