• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 27 ஜனவரி 2024

அன்பரே, ஆண்டவர் உன்னைப் பராமரித்துக்கொள்கிறார்!

வெளியீட்டு தேதி 27 ஜனவரி 2024

ஆதியாகமம் 1வது அத்தியாயமானது பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரான தேவனைப் பற்றிப் பேசுகிறது!

இன்றுவரை, விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தில் 200 ஆயிரம் கோடி விண்மீன் மண்டலங்கள் (Galaxies) இருப்பதாக மதிப்பிடுகின்றனர்; இது பூமியில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் 28 விண்மீன் மண்டலங்கள் இருப்பதற்குச் சமம்!  மேலும் இந்த மண்டலங்கள் ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, நமது அண்டம், பால்வெளி மண்டலம் (Milky Way Galaxy) மட்டுமே 200 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது! இவ்வளவு பெரிய எண்ணிக்கையைப் பற்றிச் சிந்திக்கும் போதே தலை சுற்றுவதுபோல் உள்ளதல்லவா?

இதே ஆண்டவர்தான், நாம் வாழுகின்ற இந்தப் பூமியை மலைகள், ஏரிகள் மற்றும் ஆறுகளால் நிரப்பி கவனித்துக்கொண்டார்... ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் தம்முடைய வார்த்தையினால் சிருஷ்டித்தார். அதோடு கூட, அவர் நமக்கு ஐம்புலன்களையும் கொடுத்திருக்கிறார், ஆகவே தான் அவருடைய சிருஷ்டிப்பின் மேன்மையை நாம் அனுபவித்து வருகிறோம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நமது சுவை அரும்புகள் புதுப்பிக்கப்படுகிறது என்பதும், 10 மில்லியன் வெவ்வேறு வண்ணங்களை நம் கண்களால் காண முடியும் என்பதும் உனக்குத் தெரியுமா?

தேவன், தம்முடைய தயாள குணத்தால், இவ்வளவு நுணுக்கமான விவரங்களுடன் நம்மைப் படைத்து, இத்தகு வியக்கத்தக்க திறன்களை நமக்கு அளித்திருப்பாரானால், நம் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொள்ளும் அவருடைய திறனை நாம் ஏன் சந்தேகிக்க வேண்டும்?

தம்முடைய சொந்தச் சாயலில் சிருஷ்டித்தவர்களையும், யாருக்காகத் தம்முடைய சொந்தக் குமாரனைக் கொடுத்தாரோ, அவர்களையும் அவர் கவனிக்காமல் போய்விடுவாரோ?  (யோவான் 3:16)

பலர் உணர்வுப்பூர்வமாகவும் பொருளாதார ரீதியாகவும் சோர்வடையும் நேரத்திலும், ஆண்டவர் உன் தேவைகளைச் சந்திப்பார். ஏன் தெரியுமா?

  • ஏனென்றால் ஆண்டவர் உன்னை நேசிக்கிறார்.  (யோவான் 16:27
  • அவர் உன்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார், உன்னைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்.  (ஏசாயா 45:3
  • அவர் உன்னைக் கவனித்துக்கொள்ளவும், உன் தேவைகளைச் சந்திக்கவும் விரும்புகிறார்! (மத்தேயு 6:28-34

அன்பரே, கவலைப்படாதே, சர்வவல்லமையுள்ள தேவனாகிய இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர், இங்கே இருக்கிறார், அவர் உன்னைத் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறார்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.