• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 17 செப்டெம்பர் 2024

ஆண்டவர் பதிலளிக்காதபோது நீ என்ன செய்வாய்?

வெளியீட்டு தேதி 17 செப்டெம்பர் 2024

இன்று அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிப் பார்ப்போம். அவர் துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி ஆண்டவரிடத்தில் மூன்றுமுறை ஜெபங்களை ஏறெடுத்தார்.  (2 கொரிந்தியர் 12:7-10)  

அவர் கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில், "அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்" என்று எழுதியது உனக்கு நினைவிருக்கிறதா? (2கொரிந்தியர் 12:8)   

நான் கற்பனை செய்வதுபோல், அவர் முதன்முறையாக ஜெபித்தபோது, ​​​​தனக்கிருந்த இந்தத் தடுக்கல்லிருந்து உடனடியாக விடுபடுவோம் என்று அவர் உறுதியாக நம்பியிருந்திருக்கலாம்:

“ஆண்டவரே, நீர் எனக்கு வேண்டும்... இந்தச் சூழல் என்னை ஆட்டிப்படைக்கிறது. தயவுகூர்ந்து... இந்த வலியை என்னிடமிருந்து அகற்றிவிடும். ஆமென்.”

ஆனாலும், முள் அப்படியே தான் இருந்தது. இருப்பினும், குணத்தில் ஸ்திரமான பவுல், மனம் தளரவில்லை. அவர் இரட்டிப்பான ஆர்வத்துடன் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் காணப்பட்டார்:

“ஆண்டவரே, இந்த முள்ளை என்னிடமிருந்து எடுத்துப்போடும்படி நான் மீண்டும் உம்மிடம் வருகிறேன். நான் அதைப் பற்றி உண்மையிலேயே யோசித்தேன், அது என்னை ஊழியத்தில் ஊனப்படுத்துகிறது. நீர் இதை என்னிடமிருந்து அகற்றினால், நான் இன்று இருப்பதை விட உமக்குச் சிறப்பாக ஊழியம் செய்ய முடியும்: நான் அதிகமான விதவைகளைச் சந்திக்க முடியும், அதிகமான மக்களைப் பயிற்றுவிக்க முடியும், உமது திருச்சபையில் ஜனங்களுக்கு கற்பிக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் அதிக கடிதங்களை எழுதவும் முடியும்! இந்தத் துன்பம் நீங்க வேண்டும்!  ஆமென்.”

இப்படி ஜெபம் செய்த பின்பும் இன்னும்... முள் அகலவில்லை. 

இந்த நேரத்தில், பவுல் நிச்சயமாக உபவாசிக்கவும், ஜெபிக்கவும் நேரத்தை ஒதுக்கியிருப்பார்; அவருடைய வலி நீங்குவதைக் காண ஆசைப்பட்டார்:

“இயேசுவே, நீர் சிலுவையில் மரித்ததன் மூலம் எங்கள் துன்பங்களை ஏற்றுக்கொண்டதாகச் சொன்னீர், என்னைப் பொறுத்தவரை, இந்த முள்ளை எதிர்த்துப் போராடும் விஷயத்தில் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் உம்மிடம் மீண்டும் ஒரு முறை கடைசியாகக் கேட்கிறேன்... இந்த வலியை என்னிடமிருந்து நீக்கிவிடும். தயவுசெய்து அதைச் செய்யும்! இல்லையென்றால், உம்மிடமிருந்து எனக்கு ஒரு வார்த்தையேனும் தேவை. ஆமென்.”

அன்பரே, இன்று, பவுலுடன் இணைந்து இந்த ஜெபத்தை ஏறெடுக்கும்படி உன்னை அழைக்கிறேன்.

"ஆண்டவரே... நான் பலவீனமாக இருக்கும்போதும், ​​நான் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதாக உணரும்போதும், ​​என்னால் அதை சகித்துக்கொள்ள முடியாது என்று நினைக்கும்போதும், ​​நான் அதை இழக்கப் போகிறேன் என்று நினைக்கும்போதும், நான் என் வாழ்வின் விளிம்பில் இருக்கும்போதும், இந்த விரக்தியை என்னால் தாங்க முடியாதபோதும், ​​நான் மிகவும் பலவீனமாக இருக்கும்போதும், இயேசுவே, உம்மால் நான் பலமுள்ளவனாக/பலமுள்ளவளாக இருக்கிறேன். என் முள்ளையும், என் விரக்தியையும் விட்டொழித்து உமது கரங்களில் என்னை ஒப்படைக்கிறேன். ஆமென்!”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “அன்புள்ள எரிக், நான் சங்கீதம் 94:19ஐ வாசிக்க விரும்புகிறேன், ஆனால் சில சமயங்களில் நான் வாசிக்காமல் விட்டுவிடுகிறேன்.  இன்று, ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ செய்தியின் மூலம் அதை நினைவுபடுத்தியதற்கு நன்றி. நீங்கள் எங்களுடன் சேர்ந்து ஜெபிக்கும் நாட்களை நான் விரும்புகிறேன். சில நேரங்களில் நான் என் ஜெப வாழ்க்கையில் பலவீனமாக இருக்கிறேன். உங்கள் ஜெபங்களின் மூலம்,  பலவீனமாக இருக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் நமக்காக பரிந்துபேசுகிறார் என்பதை எனக்கு நானே  நினைவுபடுத்திக்கொள்கிறேன். பலரை ஆசீர்வதிக்கும்படி உங்களைப் பயன்படுத்தும் ஆண்டவருக்கு நான் நன்றி சொல்கிறேன்.” (நான்சி நாகர்கோவில்)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.