• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 28 நவம்பர் 2022

(உண்மையான) ஒளி உள்ளே வரட்டும்!

வெளியீட்டு தேதி 28 நவம்பர் 2022

சமீபத்தில், நான் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த போது, ஒரு விடியற்காலை ஜெப நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இது. அது ஆண்டவருடன் ஒரு அற்புதமான தருணமாயிருந்தது.

இந்த படம் என்னை சிந்திக்க வைத்தது... இன்றைக்கு சூரியன் உதிக்கும் போது, நம் வாழ்க்கையின் மீது இன்னொரு ஒளி உதிக்க வேண்டுமென்று நான் நம்புகிறேன்: நம் ஆண்டவர் இயேசுவின் ஒளி! அவர் சொன்னார்: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.” (வேதாகமம், யோவான் 8:12)

நம் வாழ்க்கையின் இருளான இடங்களில் ஆண்டவருடைய ஒளி பிரகாசிக்க வேண்டும் :

  • நம்முடைய சோதனைகளின் மீது
  • நம்முடைய வியாதிகளின் மீது
  • நம்முடைய தோல்விகள் மற்றும் தவறுகளின் மீது
  • நாம் போராடிக்கொண்டிருக்கும் எல்லா இடத்தின் மீதும்.

நாம் உயர்வதற்கு கர்த்தருடைய வெளிச்சம் தேவை, அது போகக்கூடாது என்று நாம் நினைக்கும் இடத்திற்கு கூட! பெரும்பாலும் பயத்தின் காரணமாக, நாம் ரகசியமாக வைத்திருக்கும் அந்த இடங்களுக்குள்  கர்த்தருடைய வெளிச்சம் ஊடுருவி செல்லவேண்டும். சில நேரங்களில் நாம் ஆதாமை போல இருக்கிறோம், “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன்.” (வேதாகமம், ஆதியாகமம் 3:10)

அன்பரே, உங்கள் வாழ்க்கையின் எல்லா அறைகளிலும் கிறிஸ்துவின் ஒளியை வரவிடுங்கள், மிகுந்த இருள் நிறைந்த இடத்திலும் கூட. பயப்படாதிருங்கள்! இது வளர்ச்சியும் மறுபிறவியும் அளிக்கும் ஒளி. இது ஏதாவது அழுக்கையோ அசுத்தங்களையோ வெளிப்படுத்தினால், அது ஆண்டவர் உங்கள் உள்ளத்தையும் சிந்தனையையும் சுத்தம் செய்ய விரும்புகிறார் என்பதற்காகத்தான். உங்களை அவர் தூய்மையாக்க விரும்புகிறார்.

ஒரு வேளை அவர் கசப்பு, பொறாமை அல்லது பழிவாங்கும் எண்ணத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தால்? நீங்கள் ஆண்டவரிடம் உங்களை மன்னிக்கவும் விடுதலையாக்கவும் கேட்டால் மட்டும் போதும்.

ஆம் அன்பரே, நீங்கள் இயேசுவை பின்தொடர்ந்தால் இருளில் நடக்க மாட்டீர்கள் மாறாக அவருடைய வாழ்வு தரும் ஒளியை பெற்றிருப்பீர்கள்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.