• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 7 நவம்பர் 2022

உனக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை உண்டு, அன்பரே!

வெளியீட்டு தேதி 7 நவம்பர் 2022

ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் நெருங்குகையில், அந்த ஞாயிறன்று என்னென்ன வகை இறைச்சியை எந்த வகையில் சமைக்கலாம் சாப்பிடலாம் என்பதை பட்டியலிட்டு விவாதித்து முடிவெடுப்பதை நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் காணமுடியும். அதுவும் 40 நாள் இறைச்சி சாப்பிடாமல் இருந்திருந்தால்…இதனுடைய முக்கியத்துவமே தனி!

இது நம்மை ஒரு முக்கியமான கேள்விக்கு கொண்டு செல்கிறது: ஈஸ்டர் என்பது, வெறும் இறைச்சியை உண்டு கொண்டாடும் ஒரு பண்டிகையா? நிச்சயமாக இல்லை, என்பதே இதற்கு பதில்.

ஈஸ்டர், இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மட்டுமின்றி அவர் மரணத்தையும் அதன் சகல வல்லமையையும் வென்றார் என்பதை நமக்கு ஞாபகப்படுத்தும் ஒரு பண்டிகை.

ஈஸ்டர், அல்லது உயிர்த்தெழுதல் நாள் என்பது சுவிசேஷத்தின் ஒரு முக்கியமான அங்கம் : “கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்”! (வேதாகமம், ரோமர் 8:34). 

முதன்முதலான ஈஸ்டர், அதாவது பஸ்கா பண்டிகை, பழைய ஏற்பாட்டின் உபாகமம் 16 : 1 மற்றும் 3ல் குறிப்பிடப்பட்டுள்ளது : "ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி [...]"

இஸ்ரவேலின் தேவன் தம் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த நாளை பஸ்கா பண்டிகை நினைவு கூறுகிறது. ஆண்டவரின் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறினர். இறுதியாக! விடுதலை....400 வருட அடிமைத்தனத்திற்கு பிறகு.

இதுபோல, இயேசுவே நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி ஆனார்….. அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக நம்மை வெகுவாக அழுத்துகின்றன பாவத்திலிருந்தும் பாவத்தின் வல்லமையில் இருந்தும் நாம் விடுதலை பெறுகிறோம். அவருடைய தியாகமானது நம் அடிமைத்தனத்தின் இடமான “எகிப்தை விட்டு வெளியேற” நம்மை அனுமதிக்கிறது. கடவுளின் பிள்ளைகளாக மாறிய அனைவருக்கும் என்ன ஒரு விடுதலை!

ஈஸ்டர் பண்டிகை, நாம் உண்ணும் உணவுகளின் கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டது… இது ஆண்டவருடைய வெற்றியின் கொண்டாட்டம், அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் நாம் பெறும் விடுதலை மற்றும் மீட்பின் கொண்டாட்டம்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.