• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 21 ஆகஸ்ட் 2024

அன்பரே, உன் பாதுகாப்பு எங்கே இருக்கிறது?

வெளியீட்டு தேதி 21 ஆகஸ்ட் 2024

உண்மையிலேயே, இன்று உன் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், எதில், அல்லது யாரிடத்தில், உன் பாதுகாப்பு இருக்கிறது என்று எண்ணுகிறாய்? பொதுவாகவே பல விஷயங்களிலிருந்து நமது பாதுகாப்பு உணர்வை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  உதாரணத்திற்கு…

  • நம் குடும்பத்திலிருந்து,
  • நம் வேலையிலிருந்து,
  • நம் பணத்திலிருந்து,
  • நம் நண்பர்களிடமிருந்து,
  • நம் சொந்த திறமை மற்றும் பெலத்திலிருந்து,
  • அல்லது திருச்சபைக்கு ஊழியம் செய்வதிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 

இயேசு நம்மிடம் கூறுகிறார்: “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.” (லூக்கா 14:26)  

இந்த வார்த்தைகள் நமக்கு கடுமையானதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், இந்தக் கட்டளையானது நம் மீது உள்ள மிகுந்த அன்பினால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.‌ சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இயேசுவும் நம் வாழ்வில் முதல் இடத்தைத் தர வேண்டும்; மேலும் நமது பாதுகாப்புக்கான நம்பிக்கையை முதலாவதாக நாம் அவரிடத்தில் வைக்க வேண்டும். 

மற்ற பாதுகாப்பு அனைத்துமே கடந்துபோகக் கூடியவை, தற்காலிகமானவை, குறுகிய காலத்துக்கு மட்டுமே நிலைத்துநிற்பவை... இறுதியில் அந்தப் பாதுகாப்பு இல்லாமல்போய்விடும். ஆனால் இயேசுவோ... என்றென்றும் நிலைத்திருப்பவராய் இருக்கிறார். அவர் நித்திய காலமும் நீடித்திருக்கும் ஆண்டவர். அவரை விட பாதுகாப்பான ஒரு தங்குமிடத்தை, தஞ்சமடையக் கூடிய ஒரு இடத்தை உன்னால் கண்டுபிடிக்க முடியுமா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதக்காரன் இதை எழுதினார்: “என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண். உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்: சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.” (சங்கீதம் 31:3-5

இன்றும், இயேசு உன் கன்மலையாகவும், உன் வாழ்க்கைக்கு அடைக்கலமாகவும், உன் இதயத்திற்கு ஒரு புகலிடமாகவும் இருக்கிறார். ஓ, அவர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார்... அவருடைய உண்மை உன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

அன்பரே, உன் பாதுகாப்பு அவரிடத்தில் இருந்தால், உன் பாதுகாப்புக்கு நீ அவரையே முதலாவதாக நம்புவாயானால், உன் வாழ்க்கை உண்மையிலேயே நன்கு பாதுகாக்கப்பட்டதாய் இருக்கும்.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.