• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 11 மார்ச் 2024

எல்லா நன்மைகளுக்கும் ஆண்டவர் தான் ஆதாரம்!

வெளியீட்டு தேதி 11 மார்ச் 2024

வானம் மந்தாரமாக இருக்கும்போது, சோர்வு ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த சமயங்களில் நாம் சோர்வாகவும், மனமடிவுடனும், எந்த வேலையும் செய்ய விருப்பமில்லாமல் இருக்கலாம்.

இப்படித்தான் ஒவ்வொருவரும் உணரக் கூடும். ஆனால், ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நம்மைப் பொறுத்தவரை, நமது யதார்த்த சூழல் அப்படியே மாறக் கூடும்! நீதியின் குமாரன் எப்போதும் ஜீவனுள்ள மேகங்களுக்கு மேலிருந்து பிரகாசிப்பதை நாம் அறிவோம்.

நம் துயரங்களுக்கு மத்தியில் சந்தோஷத்தையும் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட உற்சாகத்தையும் ஆண்டவரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளலாம்.

"தெர்மாமீட்டர்" கிறிஸ்தவர்களாக இருப்பதை விட "தெர்மாஸ்டாட்" கிறிஸ்தவர்களாக இருக்கும்படி நாம் அழைக்கப்படுகிறோம் என்று ஒருவர் ஒருமுறை கூறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், நம்மைச் சுற்றியுள்ள வெப்பநிலையை நாம் பிரதிபலிப்பதை விட (தெர்மாமீட்டர்கள்) வெப்பநிலை என்ன என்பதை நாம்தான் தீர்மானிக்க (தெர்மாஸ்டாட்கள்) வேண்டும். நாம் அனைவரும் "தெர்மாஸ்டாட்களாக" இருக்க முடியும்!

அன்பரே, ஒவ்வொரு நாளும் நீ இயேசுவிடம் வருவதன் மூலம், சகல நன்மைகளுக்கும் ஆதாரமாய் இருப்பவரிடமிருந்து நீ நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அவரே உனக்குத் தேவையான அன்பும், உன்னை ஊக்குவித்துப் புதுப்பிக்கும் சந்தோஷமும், நாள் முழுவதும் உன்னை வழிநடத்திச்செல்லும் பலமுமாய் இருக்கிறார்!

ஆகவே, உன்னிடம் ஏதாவது குறைவுபடும்போது, மூல ஆதாரத்திற்குச் சென்று அதிலிருந்து உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்வதற்கான சரியான நேரம் இதுவே, நீ மீண்டும் நிரம்பி, பிரகாசிக்கும் வரை, மீண்டும் நிரம்பி வழியும் வரை எடுத்துக்கொள்ளலாம்!

நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் சோகத்தையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கும்போது, நிச்சயம் நம்மால் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்க முடியும். நம் உலகத்தை இருள் சூழ்ந்துகொள்ளும்போது கூட, நாம் உற்சாகமடைவது சாத்தியம்தான்.  ஆம், ஆண்டவரால் அது கூடும்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளையும் கருத்துகளையும் வாசிப்பது, எனது மனச்சோர்வை  என் வாழ்க்கையிலிருந்து நீக்குகிறது. அதற்குப் பிறகு, நான் தனிமையாக உணர்வதில்லை, என் முழு நம்பிக்கையையும் இயேசுவின் மீதும், தேவன் மீதும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் மீதும் வைக்கிறேன். வலிமையையும் இன்னும் ஆழமான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எனக்கு மீட்டுக்கொடுத்ததற்கு நன்றி.” (Silvia)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.