வெளியீட்டு தேதி 20 டிசம்பர் 2024

ஏன் தேவனே, ஏன்?

வெளியீட்டு தேதி 20 டிசம்பர் 2024

உன் பரபரப்பான கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் கிறிஸ்துவுக்காகக் காத்திருக்கும் இந்த 5வது நாளில் உன்னைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!

அன்பரே நீ எப்போதாவது ஆண்டவரிடத்தில், “என்னை ஏன் காத்திருக்க வைக்கிறீர்” என்று கேட்டிருக்கிறாயா? நான் இப்படிப் பலமுறை ஆண்டவரிடம் கேட்டிருக்கிறேன்.

வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்து, கடலுக்கு அதன் எல்லையை வகுத்து, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தினவாரான இப்பிரபஞ்சத்தின் ஆண்டவர், (நீதிமொழிகள் 8:29) மற்றும் (யோபு 38:8-11) நாம் அவருக்காகக் காத்திருக்க வேண்டும் என்று விரும்புவாரா?

பற்றியெரியும் முட்செடியிலிருந்து தம்மை வெளிப்படுத்துபவர் (யாத்திராகமம் 3:2) அல்லது ஒரு மெல்லிய சத்தத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்துபவர்  (1 இராஜாக்கள் 19:11-13) சில சமயங்களில் அவருடைய முகத்தை நமக்கு மறைக்க விரும்புவாரா?

தாவீது ராஜாவும் இதைக் குறித்துச் சிந்தித்தார்:“கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர் எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1

மனுஷர்களாக, ஆண்டவரது கிரியைகளை ஒருபோதும் "ஏன்" என்று கேட்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது, ஏனென்றால் அவருடைய வழிகள் நம்முடையதை விட மிக உயர்ந்தவை (ஏசாயா 55:9

ஆனால் அன்பரே, நான் என் சொந்த வாழ்க்கையில் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். ஆண்டவர் எனக்கு அனுமதிக்கும் ஒவ்வொரு காத்திருப்பின் காலகட்டமும், இறுதியில் அதிக ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. 

காத்திருத்தல் என்பது ஒரு தனிமையை உணர வைக்கும், வேதனையான மற்றும் சோதனை மிகுந்த அனுபவமாக இருக்கலாம். 

"வாழ்க்கையின் மிகப்பெரிய கஷ்டங்களில் ஒன்று ஆண்டவருக்காகக் காத்திருக்கும் கஷ்டம்தான்." - ஓஸ்வால்ட் சேம்பர்ஸ்

ஆனால் வேதாகமம் நமக்கு இதை வாக்குப்பண்ணுகிறது:

“உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.” – (ரோமர் 5:3-5)  

கர்த்தருக்காகக் காத்திருப்பது உட்பட, ஆண்டவர் உன்னிடம் கேட்கும் அனைத்தும் உன் வாழ்க்கையை பெரிதும் ஆசீர்வதிக்கும் என்று நீ விசுவாசி!

"கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பை அன்பரே வின் இதயத்தில் ஊற்றியதற்காகவும், நாங்கள் உமக்காக எவ்வளவு காலம் காத்திருந்தாலும், எங்கள் காத்திருத்தல் வீண்போகாது என்பதால் உமக்கு நன்றி!"

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.