• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 13 அக்டோபர் 2024

குற்ற உணர்வால் நீ நிரம்பியிருக்கிறாயா? அப்படி இருக்க வேண்டியதில்லை!

வெளியீட்டு தேதி 13 அக்டோபர் 2024
  • "இன்று நான் ஆண்டவருடன் போதுமான நேரத்தை செலவிடவில்லை ..."
  • "என்னுடைய வேதாகமத்தை நான் அதிகம் வாசித்திருக்கலாம்..."
  • "நான் ஆண்டவருக்காக இன்னும் அதிகமான காரியங்களைச் செய்ய விரும்புகிறேன்" 

இந்த அறிக்கைகள் உனக்கு நன்கு பரீட்சையமானவையா? நீயும் இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறாயா அல்லது சிந்தித்துக்கொண்டிருக்கிறாயா?

அன்பரே, ஆண்டவர் உன்னிடமிருந்து இப்படிப்பட்டவைகள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர் அதிக நற்செயல்களையோ, அதிக ஜெபங்களையோ எதிர்பார்ப்பதில்லை. இதைச்செய் அல்லது அதைச்செய் என்று சொல்வதில்லை. நிச்சயமாக, இந்த விஷயங்கள் நீ அவருக்கு அருகில் நெருங்கி வரவும், அவரை நன்கு அறிந்துகொள்ளவும் உனக்கு உதவும்.

ஆனால் “செய்ய வேண்டிய இவைகளை” விட ஆண்டவர் உன்னைத்தான் அதிகம் விரும்புகிறார். உன் முழு வாழ்வையும் அவர் விரும்புகிறார். ஒருமுறை, எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ் இவ்வாறு கூறினார்‌: “ஆண்டவர் நம்மிடமிருந்து எதையும் விரும்புவதில்லை. அவர் நாம் இருக்கிற வண்ணமாகவே நம்மை விரும்புகிறார்."

"காரியங்களைச் செய்தல்" என்ற பக்கத்தை நீ வலியுறுத்தினால், குற்ற உணர்வு விரைவில் மோசமாகத் தலை தூக்கும். ஆனால் ஆண்டவர் உன்னை ஆக்கினைக்குள்ளாக்க விரும்புவதில்லை. அவர் உன்னை விடுவிக்கவே விரும்புகிறார்! போதுமான அளவு காரியங்களைச் செய்யாததற்காக உன்னை நீயே குற்ற உணர்வுக்குள்ளாகத் தள்ளிவிடாதே. ஏன் அப்படிச் செய்யக் கூடாது? ஏனென்றால், அன்பரே, அவர் எல்லாவற்றிற்கும் மேலாக உன் இருதயத்தைத் தேடுகிறார். மேலோட்டமாக அல்ல, அவர் உன்னுடன் மிக ஆழமாக, நேரடியாக உறவாட விரும்புகிறார்.

"என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக." (நீதிமொழிகள் 23:26)  

இதுதான் ஆண்டவரின் பார்வையில் விலையேறப்பெற்றது: நீ என்ன செய்கிறாய் என்பதைவிட, நீ யார் என்பதே அவருக்கு முக்கியம்.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.