• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 2 ஜனவரி 2025

சுயநலவாதியான ஒரு நண்பனோ/தோழியோ உனக்கு இருந்திருக்கிறார்களா?

வெளியீட்டு தேதி 2 ஜனவரி 2025

இதுவரை, உன் நாவைக் கட்டுப்படுத்துதல், செவிகொடுக்கும் திறனை மேம்படுத்துதல் மற்றும் உதாரத்துவமாக இருக்கப் பயிற்சி செய்தல் போன்ற தொடர் முயற்சி தேவைப்படும் புத்தாண்டுத் தீர்மானங்களையே நான் உனக்குப் பரிந்துரைத்துள்ளேன். 

இருப்பினும், இன்றைய தீர்மானமானது, நீ பொதுவாக ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டிய ஒரு காரியம்: தங்கள் சுயநல நோக்கத்துக்காக உனக்குள் எதிர்மறையானவற்றை விதைக்கும் உன் நண்பர்களுடன் உனக்கு இருக்கும் உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.

ஆழமான, உண்மையுள்ள மற்றும் தெய்வீக நட்பை வேதாகமம் ஊக்குவிக்கிறது:

  • "சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்." (நீதிமொழிகள் 17:17
  • "ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்." (நீதிமொழிகள் 27:9

அதே சமயத்தில், தவறான நண்பர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களைப் பற்றியும் வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது:

  • "சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு."  (நீதிமொழிகள் 18:24
  • "நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்."  (நீதிமொழிகள் 12:26
  • "ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்."  (நீதிமொழிகள்  13:20)
  • "கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்."  (நீதிமொழிகள் 22:24-25

உன் நண்பர்கள் அனைவரும் இயேசுவை விசுவாசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல; இயேசுவை (இன்னும்) அறியாதவர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதும், உன் கிரியைகளின் மூலம் ஆண்டவருடைய அன்பை அவர்களுக்குக் காட்டுவதும் நல்லது. 

முக்கியமான விஷயம் என்னவென்றால், உன் நண்பர்கள், கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் உன்னைக் கட்டாயப்படுத்தி, பாவ வழிக்கு இட்டுச் செல்லாமல் இருப்பதை நீ உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

“என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக." (நீதிமொழிகள் 1:10,15

சுயநல நட்புறவானது வதந்திகள், கொடுமைப்படுத்துதல், கோபம், காமவிகாரம், பொறாமை என இன்னும் பல மோசமான செயல்களுக்கு நம்மை இழுத்துச் சென்றுவிடும்.

அன்பரே, நல்ல குணமுள்ளவர்களாக இல்லாதவர்கள் உனக்கு  நண்பர்களாக இருக்கிறார்களா? அவர்களது உறவுகளைத் துண்டிக்க இது உனக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்! 

“பரலோகப் பிதாவே, அன்பரேக்கு சுயநலவாதிகளின் நட்பை அடையாளம் காணும் ஞானத்தையும், அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வலிமையையும், புதிய, தெய்வீக நண்பர்களைத் தேடும் தைரியத்தையும் தருவீராக. ஆமென்”

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.