• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 நவம்பர் 2024

சிறப்பான பலன் ஒரு சிறிய விதையின் ஆரம்பத்தைக் கொண்டிருக்கும்

வெளியீட்டு தேதி 16 நவம்பர் 2024

இந்த வாரம், உன் விசுவாசக் கண்களை விரிவாய் திறக்க உன்னை அழைக்கிறேன்! ஆண்டவர் உனக்கு சிறந்ததைத் தர விரும்புகிறார். உன்னால் அதைப் பார்க்க முடியவில்லை என்றாலும், அதை உணர முடியும் அல்லது கேட்க முடியும். மேலும், வேதாகமத்தின்படி, இன்றைக்கு எது முக்கியம் என்பதை உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன்: “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்." (யோவான் 15:16)

ஒருவேளை, நீ சில சமயங்களில் கர்த்தரை சந்தேகிக்கலாம். இருப்பினும், அன்பரே, நீ பலன் கொடுக்கப்போகிறாய் என்பதை இயேசு அறிந்திருக்கிறார், ஏனென்றால் அவர் உன்னைத் தெரிந்துகொண்டார்!

முழு பிரபஞ்சத்தையும் உருவாக்க ஆண்டவர் தம் வார்த்தையை "விதைத்தார்". சகலமும் ஒரு விதையிலிருந்து தொடங்குகிறது. நீ கிராமப்புறங்களில் வசிக்கிறாய் என்றால், உன் தோட்டத்தில் விளைந்த பொருட்களை உண்ணும் அதிர்ஷ்டம் உனக்கு இருக்கும். நீ பலனடைவதற்கு முன், முதலில் விதையை விதைக்க வேண்டும்! இந்தச் செயல் சிறந்த சூழலில் நடைபெற வேண்டும்: நன்கு ஆயத்தமாக்கப்பட்ட, களையெடுக்கப்பட்ட, உழவு செய்யப்பட்ட மற்றும் நீர்ப்பாய்ச்சப்பட்ட மண்ணாக அது இருக்க வேண்டும்.

தானியத்தின் அளவு, அதன் நிறம் மற்றும் அதன் வடிவமைப்பு ஆகியவை அவ்வளவு முக்கியமானது அல்ல. நீ நினைப்பதுபோல் நிச்சயம்  முக்கியமல்ல. விதைக்கு உள்ளே என்ன இருக்கிறது, விதையில் "இணைக்கப்பட்டிருப்பது" எப்படிப்பட்டது என்பதே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இருப்பினும், ஒவ்வொரு விதையையும் போலவே, அதன் முழு சாரத்தையும் வெளிப்படுத்த, அது நல்ல நிலையில் நடப்பட வேண்டும்.

உன் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. மிகவும் மதிப்புமிக்க விஷயம் நீ மேலோட்டமாகப் பார்க்கும் காரியங்கள் அல்ல: அதாவது, உன் அந்தஸ்து, வேலை, உடைமைகள், நீ வசிக்கும் இடம் போன்றவை அல்ல. உண்மையில் முக்கியமானது என்னவென்றால், உனக்குள் என்ன இருக்கிறது என்பதுதான்: சிருஷ்டிகரான ஆண்டவர் உன் நிலமாகிய இதயத்தில் விதைத்த இந்த "விதைகள்," அதாவது, உன் இதயத்தின் ஆழத்தில் வைத்திருப்பவைகளே முக்கியம்.

இந்த விதைகள் என்னவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?

  • உன் வரங்கள் என்ன?
  • உன் திறமைகள் என்ன?
  • உனக்கு கனவுகள் இருக்கிறதா?

அன்பரே, அவற்றை வெளியே கொண்டுவர, இந்த வரங்கள் அல்லது திறமைகள் உன் நிலத்திலிருந்து வெளிப்பட வேண்டும், இன்னும் சொல்லப்போனால், உன் இதயத்திலிருந்து அவற்றை "வெளியே கொண்டுவர" வேண்டும். விதைத்தால் மட்டுமே, அவை பலனைத் தரும். அது மற்றவர்களை ஆசீர்வதிக்கும் கண்ணுக்குத் தெரியக்கூடிய கனியாக இருக்கும்.

அதிகக் கனிகளைக் கொடுக்கும்போது, நீ பிதாவை மகிமைப்படுத்த வேண்டும் என்பதை நினைவில்கொள். அப்படிச் செய்யும்போதுதான், நீ அவருடைய சீஷராக இருப்பாய். இது உனக்கு வேண்டுமா? எனவே, இனியும் காத்திருக்க வேண்டாம். ஆண்டவர் உனக்குள் வைத்துள்ள இந்த வரங்களை வெளியேகொண்டுவா. உன் வாழ்க்கையில் நீ கொண்டிருக்கும் திறமையை வெளியே கொண்டுவா!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.