• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 ஆகஸ்ட் 2023

அன்பரே, நீ உண்மையிலேயே விலையேறப்பெற்ற ஒரு நபரா?

வெளியீட்டு தேதி 16 ஆகஸ்ட் 2023

உண்மையிலேயே அளவில்லா மதிப்பு உனக்கு இருக்கிறதா? ஒருவேளை இப்படி ஒரு கேள்வி எதற்காகக் கேட்கப்படுகிறது என்று நீ யோசிக்கலாம்? நம்மில் பெரும்பாலானோருக்கு, நம்முடைய ஜீவனுக்கும், ஆத்தும இரட்சிப்புக்கும் எந்த விலையும் இருக்காது என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால், இந்த வேத வசனம் இப்படி சொல்கிறது, இது உனக்காகத் தனித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது...

"உனக்குத் தெரியும், அன்பரே, உன் முன்னோர்களால் [பாரம்பரியமாய்] நீ அனுசரித்துவந்த வீணான [ஆவிக்குரிய ரீதியில் பலன் தராத] நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், அன்பரே, [பலியிடப்பட்ட] குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டாய் [நீ உண்மையில் விலைக்கு வாங்கப்பட்டாய்] என்று அறிந்திருக்கிறாயே."  (வேதாகமத்தில் 1 பேதுரு 1:18-19ஐப் பார்க்கவும்)

இந்த மீட்பிற்காக நீ எவ்வளவு விலையை செலுத்தியிருக்க முடியும்? பத்து லட்சமா? 100 லட்சமா? 1000 லட்சமா? இந்த உலகத்தில் உள்ள எல்லா தங்கத்தையும் ஈடாகக் கொடுத்தாலும் உன் ஆத்துமாவை வாங்கவோ அல்லது நரகத்தின் பிடியிலிருந்து உன் வாழ்க்கையை பிரித்தெடுக்கவோ அது போதுமானதாக இருந்திருக்காது.  இயேசுவின் இரத்தமும், தேவனுடைய குமாரனின் தியாகமும் மட்டுமே அதைச் செய்து நிறைவேற்ற முடிந்தது!

குற்றமில்லாதவர் பாவமுடையவரானார். அவர் உன் அக்கிரமத்தையும் உன் சகல துக்கங்களின் பாரத்தையும் சுமந்தார். உன் மதிப்பை பூமிக்குரிய விஷயங்களை அடிப்படையாகக்கொண்டு மதிப்பிட முடியாது. உன் ஜீவன் போன்ற ஒன்றை மீட்கும் ஒரே "நாணயம்" தேவனுடைய இரத்தமாகும், அதாவது இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே உன் ஜீவனை மீட்க முடியும்.

அன்பரே, நீ தேவனுக்கு மிகவும் விலையேறப்பெற்ற ஒரு நபர்! அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார். இயேசு உன்னை மிகவும் நேசிக்கிறார். நீ இந்தச் செய்தியைப் படிக்கும்போது, ​​​​உனக்கு தேவன் மீதான வாஞ்சை அதிகமாகி, உன் ஆத்துமா புதிதாக்கப்பட்டு, உன் இருதயம் ஆழமாகத் தொடப்பட வேண்டும் என்பதே எனது ஜெபமாக இருக்கிறது. இன்று அவருடைய சமாதானத்தினாலும் அன்பினாலும் நிரப்பப்படுவாயாக!

கர்த்தருக்கு மகிமை : “நான் தவறு செய்தேன் என்று நினைத்துக்கொண்டு வளர்ந்தேன்... நான் பிறந்தது ஒரு தவறு என்றே எப்போதும் சொன்னார்கள். உங்கள் ஊழியத்தின் மூலமாக, என் மீது கட்டப்பட்டுள்ள கட்டுகளிலிருந்து விடுபட நான் கற்றுக்கொள்கிறேன்!! நான் தேவனுடைய பிள்ளை என்பதையும், அவர் என்னை நேசிக்கிறார் மற்றும் உற்சாகப்படுத்துகிறார் என்பதையும் நான் உணர்கிறேன். நான் நேசிக்கப்படுகிறேன், மற்றும் அவருடைய சாயலில் பிரம்மிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டேன்! நான் அன்பிற்கு தகுதியானவள் நன்றி!!!”  (தெபோராள்)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.