• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
வெளியீட்டு தேதி 8 நவம்பர் 2024

யாருக்கு ஊக்கம் தேவை? 🤗

வெளியீட்டு தேதி 8 நவம்பர் 2024

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது." (சங்கீதம் 94:18-19

"உம்முடைய ஆறுதல்கள்", என்ற கூற்று மற்ற பதிப்புகளில், "உமது தேறுதல்கள்," மற்றும் "உமது ஊக்கம்" என்று சொல்லப்பட்டுள்ளன.

ஒரு நாள், நானும் என் நண்பரும் ஒரு மலை உச்சிக்கு ஏற முடிவு செய்தோம் (அது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமான யோசனைதான்). நாங்கள் மலையேறத் தொடங்கினோம், பல மணிநேர கடுமையான முயற்சிக்குப் பிறகு, மலை உச்சியை அடைந்து, அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்தோம். அது மனதைக் கொள்ளைகொள்வதாக இருந்தது, மெய்சிலிர்க்கச் செய்தது!

ஆனால் ஐயோ, நான் ஒரு விஷயத்தை மறந்துவிட்டேன்: ஒரு மலையில் ஏறினால் மட்டும் போதாது... பிறகு கீழே இறங்க வேண்டும்! நான் களைத்துப்போயிருந்தேன், நாங்கள் ஆபத்தான இறக்கத்தை நோக்கிச் செல்லும்போது, ​​ஒரு குழுவினர் மேலே ஏறுவதைக் கண்டோம். அவர்களில் ஒருவர், என்னை உற்றுநோக்கி, என் கண்களைப் பார்த்து, "உன்னால் முடியும்" என்று சொல்லி ஊக்கப்படுத்தினார். இந்த வார்த்தைகள் எனக்கு உதவியது, என்னைப் பலப்படுத்தியது, தொடர்ந்து முன்னேறிச் செல்ல எனக்கு ஊக்கம் அளித்தது.

நம் அனைவருக்கும் ஊக்கம் தேவைப்படுகிறது. கண் பார்வையற்ற பிச்சைக்காரன் பர்திமேயுவுவை  அமைதியாக இருக்குமாறு அனைவரும் எச்சரித்தபோதும், ​​இயேசு அங்கு நின்று அவனை ஊக்கப்படுத்தியதைப் போலவே, அவர் உன்னையும் ஊக்கப்படுத்த உன் அருகில் நிற்கிறார் (மாற்கு 10:46-52). உன்னை அமைதிப்படுத்த எத்தனைபேர் முயற்சி செய்தாலும் சரி, ஆண்டவர் உன்னை அன்புடன் அழைக்கிறார். 

தைரியமாக இரு. உன் நிலைமை மாறப்போகிறது. எழுந்து நில், உன் சோகத்தை உதறித்தள்ளு, அது கீழே விழட்டும், கர்த்தருடைய மகிழ்ச்சியை அனுபவி! ஏனென்றால் அவருடைய மகிழ்ச்சியே உனது பலம்!

அன்பரே, ஆண்டவரே உன்னை ஊக்குவிப்பதால், உன்னால் முடியாதது  என்று எதுவும் இருக்காது! தேவனால் எல்லாம் கூடும்!

Eric Célérier
எழுத்தாளர்