• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 19 ஏப்ரல் 2024

கவலைக்கு முற்றுப்புள்ளி வை!

வெளியீட்டு தேதி 19 ஏப்ரல் 2024

பெரும்பாலும் நமது துன்பங்கள் வார்த்தைகளிலிருந்து தான் தொடங்குகின்றன...ஆண்டவர் தம் வார்த்தையில் கூறுகிறார், "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்." (நீதிமொழிகள் 18:21)

வார்த்தைகள் நம்மை பரவச மகிழ்ச்சியால் நிரப்பலாம் அல்லது இருப்பதிலேயே மிக மோசமான உணர்ச்சி ரீதியான வலியை ஏற்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, நம் உரையாடல்கள் நேர்மறையானதாகவும், நம்பிக்கையும் ஊக்கமும் நிறைந்ததாகவும் இருந்தால், ஒரு குறிப்பிட்ட அளவிலான நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் நாள் முழுவதும் கடந்து செல்வோம். இதற்கு மாறாக, நம் உரையாடல்கள் மன அழுத்தத்திலிருந்து வரும் வார்த்தைகளால் நிறைந்திருந்தால், நாம் கவலையுடன் அந்த நாளின் நிகழ்வுகளை அணுகுகிறோம்.

தவறாக நடக்கக்கூடியவற்றைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாக மன அழுத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்கிறோம்... விசுவாசத்தின் அளவைக் குறைக்கிறோம்.

ஆனால் இந்த வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன? ஏன் சில நேரங்களில் அது மிகவும் எதிர்மறையாக இருக்கிறது?

மீண்டும் இங்கே தேவன் தம் வார்த்தையில் இதை நமக்கு வெளிப்படுத்துகிறார்: "...இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்." (லூக்கா 6:45)

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உன் உள்ளம் கவலையினால் நிறைந்திருந்தால், உன் வார்த்தைகள் உன் கவலையைப் பிரதிபலிக்கும்.

யோபுவும் இதை கூறியுள்ளார் : "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது." (யோபு 3:25

ஆண்டவரின் உண்மையுள்ள ஊழியனான யோபின் வார்த்தைகளிலிருந்து நாம் பார்க்கிறோம், அனைத்தும் முதலில் இதயத்திலும் எண்ணத்திலுமிருந்து தான் ஆரம்பிக்கிறது. சந்தேகம் மற்றும் பயத்தின் பிடியினால் நாம் கவலையுடனும், மன அழுத்தத்திலும் இருந்தால், நம் உள்ளம் வருத்தத்திலும், கலக்கத்திலும் இருக்கும். மேலும் நம் சிந்தனை எதிர்மறையான எண்ணங்களால் நிரப்பப்படும், இது நாம் செய்யப்படுவதைத் தடுக்கும், முன்னேறுவதைத் தடுக்கும், நம் சமாதானத்தைத் திருடி, சில சமயங்களில் நம்மை முடக்கவும் கூடும்!

அன்பரே உன் வாழ்க்கையின் சூழ்நிலை இப்படித்தான் இருக்கிறதா? அப்படியானால், விரக்தியடைய வேண்டாம், ஏனென்றால் ஆண்டவருடைய வார்த்தை சிறந்த ஆலோசனைகளால் நிரம்பி வழிகிறது.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு உன் அணுகுமுறையை மாற்றினால் என்ன நடக்கும்?

உன் மனநிலையை மாற்றினால் என்ன? அதிக நம்பிக்கையுடன், அமைதியுடன் அந்தச் சூழ்நிலையை அணுக முயற்சிப்பதன் மூலம் மாற்றலாம் அல்லவா?

எப்படி இதைச் செய்வது? மிகவும் எளிமை, ஆண்டவரின் சமாதானத்தால் உன்னை நிரப்பும்படி கேட்கத் தொடங்குவதன் மூலம் இதைச் செய்யலாம். பின்னர், ஊக்கம், ஆறுதல் மற்றும் விடாமுயற்சியின் வார்த்தைகளை உன் உள்ளத்தில் ஊற்றும்படி அவரிடம் கேள்.

பயப்படுவதற்குப் பதிலாக, சகலத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரின் பாதத்தில் உன்னைப் பற்றிய அனைத்தையும் ஒப்புக்கொடுக்க நான் உன்னை அழைக்கிறேன். இன்று என்னுடன் சேர்ந்து இதைப் பற்றி ஜெபிக்க விரும்புகிறாயா?

“தந்தையே, எனக்கு உறுதியளிக்கும், உதவும், மீண்டும் தைரியத்தால் நிரப்பும் உமது வார்த்தைக்கு நன்றி. எப்பொழுதும் உமது வார்த்தையின் உண்மையைப் பறைசாற்றவும், மற்ற எதையும் விட என் கண்களை உம்மீது பதிக்கவும் நான் தேர்வு செய்கிறேன். என்னை பாரப்படுத்தும் இந்தக் கவலைகள் அனைத்தையும் நான் உம்மிடம் தருகிறேன். நீரே என் வழிகாட்டி, என் ஆறுதல், என் தலையை உயத்துகிறவர். உமது நாமமே போற்றப்படட்டும்! ஆமென்.”

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.