• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 11 மே 2024

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வாக்குத்தத்தம் உண்டு, அன்பரே

வெளியீட்டு தேதி 11 மே 2024

"ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்." (பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 23:6

இயேசு உனக்கும் உன் வாழ்விற்கும் நன்மை செய்வதையே விரும்புகின்றார். அவர் உன்னை ஆசீர்வதிக்கவும், நிரப்பவும், மகிழ்ந்து களிகூரப்பண்ணவும், வாழ்வில் வெற்றிபெறச் செய்யவும் விரும்புகிறார்….

இயேசு அவருடைய இரக்கத்தை உன் வாழ்விலும், உன் மூலமாக பிறர் வாழ்விலும் காண்பிக்க விரும்புகின்றார்…

நீ பிறர் வாழ்வில் இரக்கம் காட்டவும், அவர்களை மன்னிக்கவும், இயேசுவின் ஜீவனையும், சமாதானத்தையும் அவர்கள் வாழ்வில் ஊடுருவச் செய்யவும் அவர் உனக்கு உதவிபுரிகிறார்.

  • நீ கர்த்தரால் அழைக்கப்பட்டு, அவரிடத்தில் அன்பு கூறுகிறபடியால், நன்மை உனக்குரிய வாக்குத்தத்தமாய் இருக்கிறது. எனவே உனக்கு நன்மை பயக்கவே, எல்லாக் காரியங்களும் ஒன்றாக செயல்படுகின்றன: "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." (பரிசுத்த வேதாகமத்தில் ரோமர் 8:28ஐ பார்க்கவும்)
  • தேவன் உன்னிடம் காண்பித்த இரக்கத்தை நீ பிறரிடம் காண்பித்து அந்த இரக்கத்தை பெருகச்  செய்யும்போது, தேவன் உன்னையும் ஆசீர்வதிப்பார். "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." (பரிசுத்த வேதாகமம், மத்தேயு 5:7

"நிச்சயமாகவே உன் வாழ்நாள் முழுவதும் நன்மையும் கிருபையும் உன்னைத் தொடரும்."

பரிசுத்த ஆவியானவர் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். நாம் பிறருக்கு இரக்கம் பாராட்ட வேண்டும். ஏனென்றால் தேவன் முதலில் நமக்கு இரக்கம் பாராட்டியிருக்கிறார். இன்று நம் தேவனை ஆராதிக்கும்படியாக உன்னை நான் அழைக்கிறேன்.

" .. நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்." (பரிசுத்த வேதாகமத்தில் யாக்கோபு 2:13ஐ பார்க்கவும்)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “திரு. எரிக், நான் என் வாழ்வில் பெரும்பான்மையான நாட்களை  உலகப் பிரகாரமாக வாழ்ந்து வந்தேன். கடந்த 4 ஆண்டுகளாக இயேசு கிறிஸ்துவின் ஒளியில் நடக்கத் துவங்கியிருக்கிறேன். அதனால் என் வாழ்வு நூறு மடங்கு முன்னேறியுள்ளது. இந்தப் பதிவு என் வாழ்வைக் குறித்து மிகத் துல்லியமாகப் பேசியது. தினமும் பதிவிடப்படுகிற பதிவுகளுக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் இப்போது கட்டுகளின்றி, விடுவிக்கப்பட்டிருகிறேன், குணமாக்கப்பட்டிருக்கிறேன். பிதாவாகிய தேவனே, நீர் என் மீது காண்பித்த  உமது இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். திரு. செலரியர் அவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.” (லீலா).

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.