• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 13 மே 2024

தேவன் மிகச்சிறந்த குயவர்

வெளியீட்டு தேதி 13 மே 2024

அருமை அன்பரே!

இந்த வாரம், ஆண்டவருடைய வார்த்தையின் ஐசுவரியத்தை நாம் ஆராய்ந்து பார்ப்போம். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம், 18ஆம் அத்தியாயத்திற்கு நமது கவனத்தைத் திருப்புவோம், அங்கு குயவன் கரங்களில் உள்ள பாண்டம் - என்ற இந்த வல்லமை வாய்ந்த, ஊக்கமளிக்கும் பத்தியை நாம் காண்கிறோம். எரேமியா 18:1-6 கூறுகிறது, "கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான். குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான். அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்: இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்." 

நாம் ஒன்றாக சேர்ந்து குயவன் வீட்டிற்குப் பயணம் செய்வோம். பண்டைய எருசலேம் நகரத்தின் தூசி படிந்த தெருக்களில், ஒரு திறமையான குயவனின் பட்டறைக்கு பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதை நீ ஒரு கணம் கற்பனை செய்து பார். அங்கு நீ உள்ளே நுழைந்தவுடன், களிமண் குவியலை உற்று நோக்கியபடி, உறுதியான கைகளுடனும் கூரிய பார்வையுடனும் பணிபுரியும் ஒரு திறமையான கலைஞன் மட்பாண்டத்தை வனைந்துகொண்டிருக்கும் ஒரு கண்கவர் காட்சியைப் பார்க்கிறாய். எரேமியா நமக்குக் காட்டும் காட்சி இதுதான், இன்றுவரை நம் இதயங்களில் நின்றுகொண்டிருக்கும் காட்சியும் இதுதான்.

முதலில், ஆண்டவர் தம்மைத்தாமே குயவனுக்கு ஒப்பிடுகிறார் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். குயவன் வீட்டில் என்னென்ன இருக்கிறது? களிமண், ஒரு சுழலும் சக்கரம், உலர்த்தும் இடம், ஒரு சூளை மற்றும் மிக முக்கியமாக, "குயவனின் கைகள்" போன்றவை காணப்படுகின்றன.

குயவனின் கைகளில் இருக்கும் களிமண்ணைக் கொண்டுதான் செயல்முறை தொடங்குகிறது. நாம் கடந்து செல்லும் பல சூழ்நிலைகள் ஏன் என்று நமக்குப் புரிவதில்லை. நான் ஏன் இதைக் கடந்து செல்கிறேன்? இது என்ன கஷ்டம்? ஏன் இப்படி ஒரு எதிர்பாராத திருப்பம்? இப்படி பல கேள்விகள் நமக்குள் எழலாம். இருப்பினும், காலப்போக்கில், இந்தத் தருணங்கள் அனைத்தும் குயவனின் கரங்களில் உள்ள கருவிகளைப்போல, நம் வாழ்க்கையை வடிவமைக்க பயன்படுத்தப்பட்டவை என்பதை நாம் உணர்கிறோம்.

அன்பரே, தெய்வீக மாற்றத்தின் பாதையை சந்தோஷத்துடனும் எதிர்பார்ப்புடனும் ஏற்றுக்கொண்டு வாழ். உன் வாழ்வில் நடப்பதெல்லாம், நீ அவருடைய மகிமையை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரமாக மாறுவதற்கான செயல்முறையாக இருக்கிறது.

ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.