• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 மே 2024

ஆண்டவர் உன் வாழ்வை வடிவமைக்கட்டும்! அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும்!

வெளியீட்டு தேதி 16 மே 2024

அருமை அன்பரே!

ஒரு குவளையை உருவாக்கும் செயல்முறையைப் புரிந்துகொண்ட பின்னர், பலரும் களிமண்ணாக இருக்க விரும்பாமல் குயவராக இருக்க விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்! சரிதானே? நம் வாழ்க்கையை நாமே வடிவமைத்துக்கொள்ளும் பொருட்டு சகலத்தையும் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் நாம் எப்போதும் வைத்திருக்க விரும்புகிறோம். நாம் ஆண்டவரின் ஈடுபாட்டை மறுத்து எதிர்த்து, நம் சொந்த வழியைப் பின்பற்றி, நம்மை நாமே சுயமாக வழிநடத்திக்கொள்ள முடியும் என்று நினைத்துக்கொள்கிறோம். இருப்பினும், இவ்வாறு செயல்படுவதன் மூலம், நமது உள்ளான மதிப்பு குறைந்து, நாம் கனத்துக்குரிய பாத்திரங்களாக மாற இயலாமல் போய்விடுகிறது. ஆனாலும் ஆண்டவரால் நம்மை மீண்டும் உருவாக்க முடியும்.

எரேமியா குயவனின் வீட்டிற்குச் சென்றபோது, ​​பாத்திரம் கெட்டுப்போனதைக் கண்டான். எரேமியா தீர்க்கதரிசி குயவன் வீட்டிற்கு வந்தபோது, குயவன் சக்கரங்களில் களிமண்ணை வனைந்துகொண்டிருந்தான். அந்த நேரத்தில், அவன் பாத்திரத்தை கவனமாக வடிவமைத்துக்கொண்டிருந்தபோது, ​​அது அவன் கைகளில் உடைந்துபோனது என்பதை வேத வாக்கியங்களை வாசிக்கும்போது பார்க்கிறோம்.

எரேமியா 18:4 - "லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து அற்றுப்போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ?"  

தாமே செயல்பட நினைத்த பலர் தங்களது தவறான முடிவால் உடைந்துபோய், தங்கள் முகத்தையும், நற்பெயரையும், கௌரவத்தையும் கெடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் நிர்க்கதியாக நிற்கிறார்கள். ஆனாலும், குயவனது கரத்தில், ஒரு புதிய வாய்ப்பை வழங்கி, பாத்திரத்தை மீண்டும் சரிபடுத்தும் சந்தர்ப்பம் நிச்சயம் நமக்கு உண்டு.

குயவன் மீண்டும் தன் கைகளால் களிமண்ணைப் பிசைந்து வேறொரு பாத்திரத்தை வடிவமைக்கத் தொடங்குகிறான், அது குயவனின் பார்வைக்குச் சரியாகத் தோன்றியது.

குயவன் களிமண்ணை வனைவதுபோலவே, நானும் என்னுடைய சித்தத்தின்படி எல்லாவற்றையும் வடிவமைக்கிறேன் என்று கர்த்தர் எரேமியாவிடம் கூறுகிறார்.

அன்பரே, இந்தச் செயல்முறையே உனக்குள்ளும் நடக்கட்டும்! சில செயல்முறைகள் வலி மிகுந்தவைகள்தான், ஆனால் சிறந்ததும் பயனுள்ளதுமான பாத்திரமாக நீ மாறுவதற்கு அவை அவசியமானவை.

குயவனின் கையில் களிமண் இருப்பதுபோல, அன்பரே, நீ ஆண்டவரின் கரங்களில் இருக்கிறாய். அவர் உன் சிருஷ்டிகர், தம்முடைய சரியான திட்டங்களின்படி அவர் உன்னை வடிவமைக்கிறார்.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.