வெளியீட்டு தேதி 31 மார்ச் 2025

கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். - சங்கீதம் 25:1

வெளியீட்டு தேதி 31 மார்ச் 2025

2025 ஆம் ஆண்டிற்கான ஒரு வார்த்தையையோ, வசனத்தையோ அல்லது வாக்கியத்தையோ நீங்கள் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டீர்களா?

ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், அடுத்த வருடத்திற்கான ஒரு வார்த்தையை ஆண்டவர் வழக்கமாக என் இதயத்தில் வைப்பதுண்டு. சில நேரங்களில், இது ஒரு பிரசங்கத்திலிருந்து வரும்; இன்னும் சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட வசனத்திலிருந்து வரும் அல்லது ஒரு ஜெபத்திலிருந்து கிடைக்கும். 2025 ஆம் வருடத்தின் வார்த்தைக்காக நான் காத்துக்கொண்டிருந்தபோது, என் கவனம் 25ஆம் சங்கீதத்துக்கு நேராகத் திரும்பியது. கடந்த மூன்று மாதங்களாக, நான் இந்த சங்கீதத்தைக் குறித்து ஜெபித்து, வசனங்களைத் தியானித்து வருகிறேன், இந்த வாரம் எனது சிந்தனைகள் சிலவற்றை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சங்கீதம் 25:1-3 வரையுள்ள வசனங்களிலிருந்து, இன்று நாம் தியானிக்கத் தொடங்கி, 25ஆம்  சங்கீதத்தை நாம் ஒவ்வொரு வசனமாகப் படிப்போம் :

“கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச் செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடிச் செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம் பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப்போவார்களாக.”

"கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்." இது மிகவும் அழகான ஜெப வாக்கியத்தின் வர்ணனை அல்லவா? நம் ஆத்துமாவானது நம் சந்தேகங்களையும் பயங்களையும், அதேவேளையில் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தைக் கொண்டிருப்பதற்கான நமது திறனையும் உள்ளடக்கியுள்ளது.

இவ்விரண்டு உணர்வுகளையும் நம்மால் ஒரே நேரத்தில் கொண்டிருக்க முடியும்.

"என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன்" என்று தாவீது சொல்கிறார், அதேசமயத்தில் அவமானமடைந்தால், அவருடைய சத்துருக்கள் அவரைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்களே என்ற பயத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். 

ஆண்டவரை நம்புவதால் நீங்கள் ஒருபோதும் பயத்தை உணரமாட்டீர்கள் என்று அர்த்தமல்ல; உங்கள் ஆத்துமாவையும் அதில் உள்ள அனைத்து நினைவுகளையும் - நல்ல காரியங்களோ, தீமையான காரியங்களோ, அல்லது அருவருக்கத்தக்கதோ - எல்லாவற்றையும் ஆண்டவரிடத்தில் கொண்டுவர நீங்கள் தேர்வு செய்யலாம் என்பதுதான் அதன் அர்த்தம்.

அன்பரே, இந்த வாரம், ஒவ்வொரு நாளும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் சங்கீதம் 25ஐ வாசித்து ஜெபிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நான் செய்வது என்னவென்றால், இறுதி வசனத்தில் எங்கள் குடும்பத்தின் பெயரைச் சேர்த்து ஜெபிப்பேன். அப்படிச் செய்யும்போது, அது "தேவனே, மென்டஸ் குடும்பத்தை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி  மீட்டுவிடும்" என்று சொல்கிறது. நீங்களும் அவ்வாறே செய்யலாம், நான் உங்களுடன் சேர்ந்து ஜெபிப்பேன்: “தேவனே, அன்பரே ஆகிய இவரை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி  மீட்டுவிடும், ஆமென்.”

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.