வெளியீட்டு தேதி 10 மே 2025

கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார் ஏசாயா 50:4

வெளியீட்டு தேதி 10 மே 2025

ஐந்து அன்பு மொழிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது கேரி சாப்மேன் என்பவரின் கருத்தாகும், மேலும் அன்பை வெளிப்படுத்தவும் பெறவும் ஒவ்வொருவருக்கும் விருப்பமான "மொழி" உள்ளது என்பது இதன் கருத்தாகும். ஐந்து மொழிகள்:

  • உறுதிப்படுத்தும் வார்த்தைகள்
  • தரமான நேரம்
  • பரிசுகளைப் பெறுதல்
  • ஊழியப் பணி
  • சரீரப்பிரகாரமான தொடுதல்

எனது மொழியானது உறுதிப்படுத்தும் வார்த்தைகள், ஆனாலும், நீங்கள் என் மனைவியிடம் கேட்டால், என்னிடம் பேசுவதற்கு ஆறாவதாக ஒரு அன்பு மொழி உள்ளது என்றே அவள் கூறுவாள்: அது சாப்பாடு.🤪

சீஷர்களாகிய நாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு, குறிப்பாகத் தேவையில் உள்ளவர்களுக்கு உறுதியளிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது. ஏசாயா கூறுகிறார்:

"இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்." (ஏசாயா 50:4)

சீஷர்களாக, நாம் ஆண்டவருடைய சத்தத்துக்கு செவிகொடுக்கும்படி உணர்வுள்ளவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக, அவர் யாரையாவது ஊக்குவிக்கும்படி நம்மை ஏவும்போது, நாம் தயாராக இருக்க வேண்டும். ‘இன்று நான் யாரையாவது ஊக்கப்படுத்த வேண்டுமா?’ என்று ஆண்டவரிடத்தில் கேட்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குங்கள். உங்கள் நாள் முழுவதும், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல்களைப் பெற்றுக்கொள்ளும்படிக்குக் கவனமாய் இருங்கள் - "அவளுக்கு ஒரு செய்தி அனுப்பு" அல்லது "அவனை அழை" என்பன போன்ற சிறிய சிந்தனைகளை கவனியுங்கள்.

நான் இதை எண்ணற்ற முறை அனுபவித்திருக்கிறேன், பொதுவாக அந்த நபர்களுக்கு அந்த செய்தி அல்லது உதவி ஏற்ற நேரத்தில் சென்றடைவது மிகவும் ஆச்சரியமானது.

அன்பரே, உங்கள் இதயத்தில் ஒரு நபருக்காக ஆண்டவரிடமிருந்து ஒரு ஏவுதலை உணர்ந்தால், தயங்காதீர்கள்! ஒரு சாதாரண அழைப்பு அல்லது செய்தி மிகப்பெரிய வித்தியாசத்தை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தக் கூடும்... நான் சொல்வதை நம்புங்கள்! 

நாம் ஜெபிப்போம்:

“பரலோகத் தகப்பனே, உமது அழகான சத்தத்திற்கு என் காதுகளையும், உமது வழிகளின் மகத்துவத்திற்கு என் இருதயத்தையும் திறந்தருளும். நீர் என்னிடம் செய்யும்படி கேட்கும் காரியங்களுக்கு, நான் செவிகொடுக்கவும் பதிலளிக்கவும் தீர்மானிக்கிறேன். எனக்குத் தேவையான விருப்பம், அறிவு, தாழ்மை மற்றும் தைரியம் ஆகியவற்றை தந்தருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.