• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
வெளியீட்டு தேதி 18 மே 2025

ஆண்டவர் உங்களை காண்கிறார் மற்றும் உங்களுக்கு செவிகொடுக்கிறார்

வெளியீட்டு தேதி 18 மே 2025

நீங்கள் ஒரு பொது இடத்தில் இருக்கும்போது, ​​யாராவது உங்களைப் பார்ப்பதை நீங்கள் உணர்வீர்களானால், அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 👀 பின்னர், நீங்கள் திரும்பி, உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நபரை நீங்களும் பார்க்கும்போது, ​​அது சங்கடமாக இருக்கும், இல்லையா?

ஆண்டவர் எல்லா நேரங்களிலும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று வேதாகமம் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? மற்றும் இதில் விசேஷேம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அது நமக்கு சங்கடமாக இருப்பதில்லை - அது மிகவும் அருமையான பார்வை!

“கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 139:1-6)  

நீங்கள் கடந்து செல்லும் எல்லாவற்றையும்... துக்கம், அநீதி, தனிமை, துரோகம் என எல்லாவற்றையும் ஆண்டவர் பார்க்கிறார். எதையும் கவனிக்காமல் விட்டுவிடமாட்டார், மேலும் அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களைப் பலப்படுத்த விரும்புகிறார்.

“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.” (2 நாளாகமம் 16:9)

ஆண்டவர் உங்களைப் பார்ப்பது போலவே, நீங்களும் அவரைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உங்கள் கவனம் உங்கள் சூழ்நிலைகளின் மேல் இருப்பதை விட்டுவிட்டு அவர் பக்கமாகத் திரும்ப வேண்டும் என்று அவர் உங்களை ஊக்குவிக்கிறார்.

இதை நாம் சங்கீதம் 34:5-6ல் வாசிக்கிறோம் : 

“அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்”

அன்பரே, ஆண்டவர் உங்களைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அவர் உங்களுக்குச் செவியும் கொடுக்கிறார்.

“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” (1 யோவான் 5:14)

ஆண்டவர் எப்போதும் உங்களைப் பார்க்கிறார் மற்றும் உங்களுக்குச் செவி கொடுக்கிறார் என்ற உண்மையைப் பற்றி இன்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்... அதற்காக அவருக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள். 🙏

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.