• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
வெளியீட்டு தேதி 20 மே 2025

ஆண்டவர் பெரும்பாலும் கவனிக்கப்படாத நபர்களையும் குறைத்து மதிப்பிடப்பட்டவர்களையுமே அழைக்கிறார்

வெளியீட்டு தேதி 20 மே 2025

ஆண்டவர் என்னை ஹிந்தி ஆராதனைப் பாடல்களை எழுத அழைப்பதாக நான் முதன்முதலில் உணர்ந்தபோது, ​​எனது ஆரம்ப பதில்:

"ஆண்டவரே, நீர் தவறான நபரைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்... இதற்கு வாய்ப்பே இல்லை! ஹிந்தி மொழியில் நன்றாகப் பேசக் கூட எனக்குத் தெரியாது" என்பதாக இருந்தது.

என் சிறுவயது நாட்களில், என் பெற்றோர் எப்போதும் என்னை ஆங்கிலம் பேசும்படி ஊக்குவித்தனர், எனவே ஆண்டவர் என்னை ஒரு ஹிந்தி ஆராதனையை நடத்தும் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது, நிச்சயமாக அவர் ஒரு தவறு செய்துவிட்டதாக நான் உணர்ந்தேன்.

ஆனால் நான் கற்றுக்கொண்டது இதுதான்: ஆண்டவர் பெரும்பாலும் கவனிக்கப்படாதவர்களையும் குறைத்து மதிப்பிடப்பட்டவர்களையுமே அழைக்கிறார்:

-  தன் தகப்பனுக்கு கடைசி இளைய மகனாக இருந்த தாவீது, தனது சகோதரர்கள் அனைவரும் சாமுவேலுக்கு முன்பாக நின்றபோது, ஆடுகளை மேய்க்கும்படி அங்கேயே விட்டுவிடப்பட்டார் (1 சாமுவேல் 16:10-11) -  மோசே ஒரு காலத்தில் ஒரு இளவரசனாக இருந்தார், ஆனால் ஆண்டவர் அவரை அழைத்தபோது, ஒரு கொலைகாரனாகவும், தப்பியோடிய நபராகவும் இருந்தார். எல்லாவற்றிற்கும்மேல், அவர் திக்குவாயுள்ள ஒரு நபராக இருந்தார். (யாத்திராகமம் 3). -  ஆண்டவர் எரேமியாவை ஒரு தீர்க்கதரிசியாக செயல்படும்படி அழைத்தபோது, அவர், “ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்!” என்று கூறினார் (எரேமியா 1:6). 

பின்னர், ஆண்டவர் கிதியோனை அழைத்தபோது, அவரும் அதே பதிலைத்தான் சொன்னார்:

“அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.” (நியாயாதிபதிகள் 6:15)

ஆண்டவருடைய பதில் என்ன? “நான் உன்னோடேகூட இருப்பேன்” (நியாயாதிபதிகள் 6:16).

உற்சாகப்படுத்தும் பேச்சு எதுவும் பேசப்படவில்லை. உண்மையில் கிதியோன் தகுதி பெற்றவன் என்பதற்கான காரணங்களின் பட்டியல் எதுவும் கொடுக்கப்படவில்லை. கிதியோன் பலவீனமான மனிதனா அல்லது முக்கியமற்ற ஒரு நபரா என்பதை பற்றிக்கூட  ஆண்டவர் அவரிடம் வாக்குவாதம் பண்ணவில்லை. அவர் இதை மட்டுமே கூறினார்:"இது உன்னுடைய பலத்தினால் அல்ல - நான் உன்னுடன் இருக்கிறேன் என்ற உண்மையினால் உன்னை அழைக்கிறேன்."

அன்பரே, இன்று உங்களுக்கான ஒரு நினைவூட்டல்தான் இது! கிதியோனைப்போல நீங்கள் சிறியவராகவோ, பலவீனமாகவோ அல்லது முக்கியமற்றவராகவோ இருப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் திறமைகளுக்கு மிஞ்சிய ஒரு வேலையை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறதா? 

ஆண்டவர் இன்று உங்களிடம் கூறுகிறார், "நான் உன்னோடுகூட இருக்கிறேன், அன்பரே. உன் குறைபாடுகளில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, உனக்குள் உள்ள என் வல்லமை மீது கவனம் செலுத்தத் தொடங்கு."

“எனக்காக யாவும் செய்து முடிக்கும் என் தேவன் நீர் இருக்க பயமே இல்லை” என்ற இந்தப் பாடல், ஆண்டவர் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார் என்பதை நினைவூட்டட்டும்!

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.