• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UR Urdu
வெளியீட்டு தேதி 9 ஜூன் 2025

நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் 2 தீமோத்தேயு 2:13

வெளியீட்டு தேதி 9 ஜூன் 2025

நீங்கள் நிம்மதியாக வார இறுதி நாட்களைக் கழித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

கடந்த வாரம், ஆண்டவரை அன்பாகக் கைப்பிடித்து நடத்தும் ஒரு தந்தையாக எப்படி தொடர்புபடுத்தலாம் என்பது பற்றி கேம்ரன் எழுதினார். இந்த வாரம், தந்தையர் தினத்தை நாம் நெருங்கி வருவதால், அதை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டவரை நமது பரிபூரண தந்தையாக அறிந்துகொள்வதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை நான் ஆராய விரும்புகிறேன்.

ஒரு தந்தையாக நாம் ஆண்டவரோடு எவ்வாறு தொடர்புகொள்கிறோம் என்பது பொதுவாக - சில நேரங்களில் ஆழமாக - நமது பூமிக்குரிய அப்பாவுடன் நாம் கொண்டிருந்த (அல்லது கொண்டிராத) உறவைப் பொறுத்து நாம் தொடர்புபடுத்திக்கொள்ளலாம். அன்பரே, அன்பான, அக்கறையுள்ள மற்றும் உங்களோடு கூடவே இருந்து உதவும் தந்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், ஆண்டவரை அதே வழியில் பார்ப்பது இயல்பாகவே இருக்கும். இருப்பினும், உங்களுக்கு ஒரு அப்பா இல்லையென்றால், துஷ்பிரயோகம் செய்த  அல்லது புறக்கணித்த  ஒரு அப்பாவாக இருந்திருந்தால், ஆண்டவரை நம்பகமான தந்தையாகப் பார்ப்பது மிகவும் சிக்கலானதாக இருக்கும்.

இந்த வாரம், ஆண்டவர் யார் என்பதைப் பற்றிய ஏழு வல்லமை வாய்ந்த சத்தியங்களுடன் வேறுபடும் ஏழு பொதுவான தந்தைவழி குறைபாடுகளைப் பற்றி நாம் கவனிப்போம். நீங்கள் அற்புதமான ஒரு குழந்தைப் பருவத்தைப் பெற்றவர்களாக இருந்தாலும், இந்தக் குறைபாடுகளை உற்றுக்கவனித்தால் நீங்கள் அதை அடையாளம் காணலாம். நம் அப்பாக்களை விமர்சிப்பது இங்கே நமது குறிக்கோள் அல்ல - பொதுவாகவே, எந்த பெற்றோரும் பூரணராக இருப்பதில்லை - ஆனால் நமது கடந்த கால அனுபவங்களின் வரம்புகளுக்கு அப்பால், நமது பரலோகத் தந்தையாக ஆண்டவர் நம் மீது வைத்திருக்கும் பரிபூரண அன்பைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

அன்பரே, ஒருவேளை இதை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்கள், "நான் தந்தை இல்லாமல் வளர்ந்தேன்" என்று யோசிக்கலாம். அது நம்மை முதல் வகைக்குக் கொண்டுவருகிறது: தந்தை இல்லாத நிலை.

உங்கள் தந்தையுடனான உறவு மரணம் அல்லது விவாகரத்து மூலம் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கலாம், அல்லது அவர் சரீரப் பிரகாரமாக இருந்தாலும் மனதளவில் தூரமாக இருந்திருக்கலாம் - எப்போதும் வேலை செய்கிறவராக, எப்போதும் பயணம் செய்பவராக, எப்போதாவதுதான் அவரைப் பார்க்க முடியும் என்பது போல. இதுபோன்ற சூழ்நிலைகளில், தம்மை உண்மையுள்ள ஒரு தந்தையாக வெளிப்படுத்திக் காட்டும் ஆண்டவரை அறிவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். அது ஆண்டவர் மீதான வெறுப்புணர்வு மற்றும் அவநம்பிக்கைக்கு கூட வழிவகுக்கலாம்.

ஆனால் ஆண்டவருடைய உண்மைத்தன்மையை நீங்கள் சந்தேகித்தாலும் கூட, அவர் நீங்கள் அறிந்தபடியே மிகவும் உண்மையுள்ள தந்தையாக இருக்கிறார்.

நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். (2 தீமோத்தேயு 2:13

அன்பரே, தந்தை இல்லாத நிலை, உங்கள் வாழ்க்கையில் ஒரு தடயத்தை விட்டுச் சென்றிருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் தனியாக இல்லை. அதை ஒப்புக்கொண்டு, உங்கள் பூமிக்குரிய தந்தையை மன்னித்து, உங்கள் பரலோகத் தந்தையின் அன்பான கரங்களில் தைரியமாக அடியெடுத்து வைக்கவும்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.