• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 10 ஜூன் 2025

தமது அதிகாரத்திலும் பரிபூரணமாக விளங்கும் தேவ அன்பு

வெளியீட்டு தேதி 10 ஜூன் 2025

நீங்கள் ஒரு நாயின் அருகே செல்லும்போது, ​​அந்த பிராணி எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை அது எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதை வைத்து நீங்கள் அறியலாம். அது தன் வாழ்நாள் முழுவதும் உதைக்கப்பட்டு விரட்டப்பட்ட ஒரு தெரு நாயாக இருந்தால், பயத்தால் திகைத்து நடுங்கும் அல்லது உறுமி ஆக்ரோஷமாக குரைக்கும். அதேசமயம், அன்பான வீட்டிலிருந்து வரும் ஒரு செல்ல பிராணியாக அந்த நாய் இருந்தால், அது தன் வாலை ஆட்டும், நாக்கை நீட்டி விளையாடி உற்சாகத்தையும் ஆர்வத்தையும் காட்டும்.

பல வழிகளில், நாமும் அதே மாதிரியானவர்கள்தான். நமது வளர்ப்பு - குறிப்பாக நமது தந்தையுடனான நமது உறவு - ஆண்டவருடைய அன்பு மற்றும் அதிகாரத்திற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதை வடிவமைக்கிறது.

நமது பெற்றோர், குறிப்பாக நமது அப்பாக்கள், நமது வாழ்க்கையின் மீது ஆண்டவர் கொடுத்திருக்கும் அதிகாரத்தையும் பொறுப்பையும் கொண்டுள்ளனர்.  நம்மை அன்போடும் கனிவோடும் வளர்க்கவும் நமக்குக் கற்பிக்கவும், அவர்கள் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.  (எபேசியர் 6:4)

இருப்பினும், தந்தைகள் அந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தலாம், உதாரணமாக, பயத்தினால் தங்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்துதல், அல்லது இன்னும் மோசமாக நடத்துதல், பாலியல் ரீதியாக தாக்குதல், அவமானப்படுத்துதல், அடித்தல் அல்லது வேறுவிதமாக அவர்களை காயப்படுத்துதல் போன்றவற்றை செய்யலாம். துஷ்பிரயோகம் செய்யும் தந்தையைப் பற்றி நாம் பேசும்போது இதைத்தான் அர்த்தப்படுத்துகிறோம்.

அன்பரே, உங்களை ஏதாவது ஒரு விதத்தில் கடுமையாக துஷ்பிரயோகம் செய்த ஒரு அப்பாவுடன் நீங்கள் வளர்ந்திருப்பீர்களானால், உங்கள் வாழ்க்கையில் பிதாவாகிய ஆண்டவருடைய அதிகாரம் பற்றிய கருத்தை நீங்கள் இயல்பாகவே நிராகரிக்கலாம்.

இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:

  • நீங்கள் ஒரு எளிய தவறு செய்யும்போது ஆண்டவர் உங்களைத அடிப்பார் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா?
  • உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் ஏதாவது தவறு நடக்கும்போது, ஆண்டவர் உங்களைத் தண்டிப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
  • ஆண்டவரை ஏமாற்ற நீங்கள் மிகவும் பயப்படுவதால், உங்கள் பாவங்களை ஆண்டவரிடமிருந்து மறைக்க முடிந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா?
  • நீங்கள் உண்மையிலேயே உங்கள் இதயம் திறந்து அவரிடம் பேசினால் ஆண்டவர் உங்களைத் துன்புறுத்துவார் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா?

இப்போது, ​​உங்கள் பூமிக்குரிய தந்தையைப் பற்றிய அதே கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அந்த பதில்கள் இதனுடன் தொடர்புடையவையாக இருக்கும் என்று நான் பந்தயம் கட்டத் துணிகிறேன். நான் சொல்வது சரிதானா?

நம் வாழ்வில் சந்தித்த, அதிகாரம் செலுத்தும் மற்ற நபர்களைப் போலவே ஆண்டவரும் இருப்பார், நாம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபராக இருக்கும்போது நம்மைத் துன்புறுத்துவார் என்று பொதுவாகவே நாம் கருதுகிறோம், ஆனால் அன்பரே, இதை தெளிவாகக் கேளுங்கள்: ஆண்டவர் அப்படிப்பட்டவர் இல்லை! அவர் தமது அதிகாரத்தில் கூட பூரண அன்பு செலுத்துபவராய் இருக்கிறார். அவர் தமது வல்லமையை துஷ்பிரயோகம் செய்வதில்லை.

அன்பரே, தந்தையின் துஷ்பிரயோகம் உங்கள் வாழ்க்கையில் ஒரு அடையாளத்தை விட்டுச் சென்றால், உங்களுக்கு மட்டும் அப்படி நடக்கவில்லை. அதை ஒப்புக்கொண்டு, உங்கள் பூமிக்குரிய தகப்பனை மன்னித்து, உங்கள் பரலோகப் பிதாவின் அன்பான கரங்களில் வர தைரியமாக அடியெடுத்து வைக்கவும்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.