• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 12 ஜூலை 2025

நீங்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்ற நபர்

வெளியீட்டு தேதி 12 ஜூலை 2025

நாம் வாழும் சமூகமானது, சமூக வகுப்பு, கல்வி நிலை, பொருட்செல்வம் போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களை வைத்து ஒரு நபரின் வாழ்க்கையை மதிப்பிடுகிறது. நீங்கள் எப்போதாவது அதே அளவுகோல்களால் மதிப்பிடப்பட்டிருக்கிறீர்களா அல்லது நீங்கள் மற்றவர்களை மதிப்பீடு செய்திருக்கிறீர்களா? 

நீங்கள் எப்போதாவது சமூகத்தால் குறைத்து மதிப்பிடப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்ந்திருந்தால், இதை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: உங்கள் மதிப்பு நீங்கள் யார் என்பதன் அடிப்படையிலோ அல்லது எப்படிப்பட்ட நபர் என்பதன் அடிப்படையிலோ தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக, நீங்கள் யாருடையவன் அல்லது யாருடையவள் என்பதன் அடிப்படையில் உங்கள் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் ஆண்டவருக்குச் சொந்தமான நபர்!  அவரது அன்புக்குரிய நபர், அவரது பிள்ளை, அவரது தலைசிறந்த படைப்பு (எபேசியர் 2:10). 

“கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” (சங்கீதம் 100:3)

நீங்கள் தற்செயலாக இந்த உலகில் பிறக்கவில்லை. பூமியில் உங்கள் வருகையை ஆண்டவர் முன்கூட்டியே ஆயத்தம் செய்தார்! வேதாகமம் இதை நமக்குச் சொல்கிறது: 

“நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”சங்கீதம் 139:15-16

இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் உங்கள் வாழ்க்கை மிகவும் முக்கியமானது என்று சொல்லும்போது, வேறு யாரால் வேறுவிதமாக உரிமை கோர முடியும்? 

இந்த உண்மையைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ளாதேயுங்கள், இதுதான் அந்த உண்மை: ஆண்டவர் உங்களை நேசிக்கிறார்.

  • உங்கள் குடும்பம், உங்கள் நண்பர்கள், உங்கள் சக ஊழியர்களுக்கு நீங்கள் ஒரு ஆசீர்வாதம்.
  • அவர்கள் வாழ்விலும் இதயங்களிலும் கர்த்தர் கிரியை செய்ய விரும்பும் சேனல் நீங்கள்!
  • தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி அவருடைய சித்தத்தைச் செய்ய நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.

அன்பரே, உங்கள் எண்ணங்களில் திடீரென்று சந்தேகம் எழும்போது, சந்தேகத்தை உண்டாக்கும் அந்தப் பொய்களை நிராகரித்துவிட்டு, இதை உரக்கச் சொல்லுங்கள்: “பரலோகத் தகப்பனே, என்னை உமது பிள்ளையாக மாற்றியதற்கு நன்றி. நான் பிறப்பதற்கு முன்பே நீர் என்னைத் தெரிந்துகொண்டீர். நீர் என்னை நேசிக்கிறீர் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள எனக்கு உதவி செய்வீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Cameron & Jenny Mendes
எழுத்தாளர்

Directors and visionaries of Yeshua Ministries, in love with each other, their son and above all, Jesus.