• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 1 ஆகஸ்ட் 2025

உதாரத்துவத்தில்... ஆண்டவர் வல்லமையுள்ளவர்

வெளியீட்டு தேதி 1 ஆகஸ்ட் 2025

கடந்த சில நாட்களாக, ஆண்டவரது வல்லமையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி நாம் தியானித்தோம்... அன்பரே, அவை ஏற்கனவே உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? இன்று, ஆண்டவரின் உதாரத்துவத்துக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, அபரிமிதமான ஆசீர்வாதங்களை நம்மீது பொழிந்தருளும் மிகவும் உதாரத்துவமான ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்கிறோம். ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சில ஆசீர்வாதங்களை இங்கே காணலாம்:

  • பரலோகத்தில் ஒரு வீடு மற்றும் நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார் (யோவான் 3:16 மற்றும் யோவான் 14:2-3)
  • நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு கொடுத்திருக்கிறார் (1 யோவான் 1:9)
  • நாம் ரசித்து மகிழ்வதற்கு அழகான படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். (யோபு 12:7-10)
  • நாள்தோறும் புதிய இரக்கங்களை கொடுத்திருக்கிறார் (புலம்பல் 3:22-23)
  • எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தைக் கொடுத்திருக்கிறார். (பிலிப்பியர் 4:6-7)
  • பரிசுத்த ஆவியானவரை ஒரு சகாயராகக் கொடுத்திருக்கிறார்;   (யோவான் 15:26)
  • ஆண்டவரின் வார்த்தையாகிய வேதாகமத்தைக் கொடுத்திருக்கிறார். (II தீமோத்தேயு 3:16-17)
  • நிறைவான சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 16:11)பரிசுத்த ஆவியானவரின் வரங்களைக் கொடுத்திருக்கிறார் (1 கொரிந்தியர் 12)
  • உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், அதாவது உங்கள் வீடு, குடும்பம், வேலை மற்றும் உங்கள் எல்லா முயற்சிகளிலும் ஆண்டவர் உங்களுக்கு உதாரத்துவமுள்ளவராக இருக்க விரும்புகிறார் (உபாகமம் 28).

ஆண்டவரின் உதாரத்துவ மனப்பான்மையின் மிகவும் வல்லமை வாய்ந்த அம்சம் என்னவென்றால், அவர் இலவசமாகவும் நிபந்தனையின்றியும் உங்களுக்குக் கொடுக்கிறார் என்பதுதான்; உங்களால் அதை சம்பாதிக்க முடியாது.

"என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது." (சங்கீதம் 103:2-5)

உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணிப்பார்ப்பது ஆண்டவரின் உதாரத்துவ குணத்துக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். "எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்... எப்படி நன்றி சொல்வேன்" என்ற இந்தப் பாடலைக் கேட்டு, என்னோடு கூட இணைந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.

அன்பரே, இன்றே இதைச் செய்ய நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நான் பகிர்ந்துகொண்ட பட்டியல் ஒரு சிறு துளி மட்டுந்தான். ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் விசேஷித்த நன்மைகளை உங்களால் எண்ணிப்பார்க்க முடியுமா? அவைகளை ஒரு பட்டியலிட்டு அவருடைய உதாரத்துவம் வெளிப்படுவதைப் பாருங்கள்!

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.