• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 12 ஆகஸ்ட் 2025

நீங்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறீர்களா?

வெளியீட்டு தேதி 12 ஆகஸ்ட் 2025

"பொறுப்பற்ற நபராக இருக்கிறீர்கள்" என்று யாராவது சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? ஒருவர் பொறுப்பற்ற முறையில், அக்கறையின்றி நடந்துகொள்ளும்போது இந்தச் சொற்றொடரை நாம் கேட்கக் கூடும்.

கிறிஸ்தவர்களாகிய நாம், ஏனோதானோவென்று அல்ல, உண்மையிலேயே "ஞானமுள்ளவர்களாக செயல்பட வேண்டும்": அதாவது, நாம் பற்றிப் பிடித்துக்கொள்ள (உறுதியாகப் பிடித்துக்கொள்ள) வேண்டிய விஷயங்கள் உள்ளன, மற்றவற்றை நாம் எளிதாக விட்டுவிடும்படி (விட்டுவிடத் தயாராக) தளர்வாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

இனி வரவிருக்கும் நாட்களில், நாம் ஆறு தலைப்புகளைப் பற்றிப் பேச இருக்கிறோம்: மூன்று விஷயங்களை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும், மற்ற மூன்று விஷயங்களை நீங்கள் அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும்.😁

நாம் எப்போதும் பிடித்துக்கொள்ள வேண்டிய ஒரு காரியம் ஆண்டவருடைய பிரசன்னமே. இதுவே பிரதானமானதும் மற்றும் முக்கியமானதுமாகும்.

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். – (1 நாளாகமம் 16:11)

ஆண்டவர் நம்மை அவருடைய பிரசன்னத்தில் வாழவும் அவருடன் நெருக்கமாக நடக்கவுமே சிருஷ்டித்தார். இருப்பினும், ஆதியாகமம் 3:8-ல் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு, ஆண்டவருடைய பிரசன்னத்திலிருந்து விலகி, ஒளிந்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாக நாம் பார்க்கிறோம்.

பாவம் இதைத்தான் செய்கிறது - அது நமக்கு மிகவும் வேண்டிய ஒரு நபரிடமிருந்து நம்மை விலக்கி, நம்மைத் தூரப்படுத்துகிறது, ஏனென்றால் ஆண்டவருடைய பிரசன்னத்தில் இவைகள் அனைத்தும் உள்ளன:

- பரிபூரண ஆனந்தம் (சங்கீதம் 16:11)

- இளைப்பாறுதல் மற்றும் சமாதானம் (யாத்திராகமம் 33:14)

-  கனிதரும் வாழ்வு (யோவான் 15:5)

- புகலிடம் மற்றும் பாதுகாப்பு (சங்கீதம் 91:1-2)

ஆனாலும் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன்: ஆண்டவருடைய பிரசன்னம் ஆக்கினைத்தீர்ப்பு செய்யப்படும் ஒரு இடம் அல்ல - அது மீட்புக்கான ஒரு இடமாகும்.

நாம் பாவம் செய்துவிட்டால், ஆண்டவரிடமிருந்து அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை; உண்மையில் சொல்லப்போனால், நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற, சிலுவையின் மீதான அவரது மரணத்தின் மூலம், ஆண்டவருடைய பிரசன்னத்தில் தைரியமாக நுழைய இயேசு வழியை உண்டாக்கிவிட்டார்:

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடைவதற்காக, தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16)

ஆண்டவருடைய பிரசன்னத்தை நாடி, அதை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்! ஆண்டவரைத் தேடவும் அவருடைய பிரசன்னத்திற்குள் பிரவேசிக்கவும் உங்களைத் தடுப்பவைகளான வெட்கம், குற்ற உணர்வு அல்லது பயம் ஆகியவற்றுக்கு இடங்கொடாதீர்கள்.

நாம் சேர்ந்து ஜெபிப்போம்:

பரலோகப் பிதாவின், எல்லா நேரத்திலும் மற்றும் எல்லா இடத்திலும் உமது பிரசன்னத்தை எனக்குக் கிடைக்கச் செய்ததற்கு நன்றி. குறிப்பாக, நான் குழப்பமடைந்திருக்கும் நேரங்களில் - தொடர்ந்து உம்மை நாடவும், தைரியமாக உம்மிடத்துக்கு நெருங்கி வரவும் எனக்கு உதவுவீராக. உமது அளவில்லாத கிருபைக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.