• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 21 செப்டெம்பர் 2025

உங்கள் முழு மனதுடன் இதைச் செய்கிறீர்களா?

வெளியீட்டு தேதி 21 செப்டெம்பர் 2025

நான் உலகத்திற்கே உரக்கச் சொல்ல விரும்பும் ஒரு விஷயம் இருந்தால், அது இதுதான்:

ஆண்டவர் உங்கள் செயல்கள், வார்த்தைகள் அல்லது தியாகங்களை மட்டுமல்ல, உங்கள் இதயத்தையும் விரும்புகிறார்.

அடிக்கடி, சுயநீதி என்னும் வலையில் சிக்கிய முதிர்ந்த விசுவாசிகளை நான் சந்திக்கிறேன்; அவர்கள் கர்த்தருக்காகச் செய்யும் செயல்கள், அவருடனான உறவைவிட அதிக மதிப்பு வாய்ந்தது என்று நம்புகிறார்கள்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணத்தை யோனா புத்தகத்தில் காணலாம்.

யோனா ஒரு தீர்க்கதரிசியாகவும், ஆண்டவரின் ஊழியராகவும் கருதப்படுகிறார். 2 இராஜாக்கள் 14:25-ல், இஸ்ரவேலின் எல்லைகள் திரும்பக் கிடைக்கும் என்று யோனா தீர்க்கதரிசனம் உரைத்தார், அது அவர் சொன்னபடியே நிறைவேறியது.

ஆண்டவர் யோனாவிடம் நேரடியாகப் பேசினார், யோனா ஆண்டவரின் குரலைக் கேட்கப் பழகியிருந்தார். வானத்தையும் பூமியையும் படைத்த karthar உடைய ஆராதனைக்காரன் என்று யோனா தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார் (யோனா 1:9). அவர் ஆண்டவரின் சட்டங்களை அறிந்தவராக, அதைக்கீழ்ப்படிந்து வாழ்ந்தவராக இருந்திருக்கலாம்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு முழு நகரத்தையும் காப்பாற்ற, மனந்திரும்புதலின் அழைப்பை யோனாவின் மூலம் ஆண்டவர் கொடுக்க முடிவு செய்தபோது, யோனா கோபப்படுகிறார். நான் இதை என் புரிதலின்படி எழுதியுள்ளேன், அவர், "நீங்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்! நீங்கள் மன்னிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், அதனால்தான் நான் முதலில் போக விரும்பவில்லை" என்று சொல்கிறார் (யோனா 4:2).

யோனா ஆண்டவர் சொன்னதைச் செய்தார், ஆனால் அவரது இதயமோ கடினப்பட்டிருந்தது.

ஆண்டவரிடமிருந்து தொலைந்துபோன நினிவே மக்களின் மீது அவன் சிறிதும் கூட மனதுருகவில்லை, ஆயிரக்கணக்கானோர் இரட்சிக்கப்படபோவதற்காக ஆண்டவரோடு கூட அவனால் மகிழ்ச்சியடைய முடியவில்லை (யோனா 4:11).

யோனா வெளிப்படையாகக் கீழ்ப்படிந்திருந்தாலும் (இறுதியில்), உள்மனதில் எந்தவொரு ஒப்புக்கொடுத்தலும் இல்லை என்பது தெளிவாகிறது.

அவர் முழு மனதுடன் அதைச் செய்யவில்லை.

நீங்கள் வெளியில் கீழ்ப்படிதலாக இருக்கலாம், ஆனால் உள்ளுக்குள் ஆண்டவரிடமிருந்து வெகு தொலைவில் இருக்கலாம்.

தங்கள் மற்றும் உங்கள் இதயம் எங்கே இருக்கிறது?

நீங்கள் ஆண்டவருக்கும் அவரது பரிபூரண சித்தத்திற்கும் உங்களை அர்ப்பணித்து வாழ்கிறீர்களா, அல்லது உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளில் ஆண்டவர் உங்களுக்கு ஒரு வித்தியாசமான முடிவைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நம்பும் ஏதேனும் இடங்கள் உங்களிடம் இருக்கிறதா?

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.