அது மிகவும் சங்கடமான உணர்வு!
வேதாகமத்தில் தாழ்மையின் மிகவும் நம்ப முடியாத வெளிப்பாடுகளில் ஒன்று, இயேசு பாஸ்கா உணவின்போது தமது சீடர்களின் கால்களை கழுவியதுதான் (யோவான் 13:3-7).
அவர் வெளிப்படுத்திய ஆழ்ந்த தாழ்மை சீடர்களுக்கு சங்கடத்தை அளித்தது. சீமோன் பேதுரு, "நீர் ஒருக்காலும் என் கால்களை கழுவப்படாது என்றான்" என்று உரக்கச் சொன்னார் (யோவான் 13:8). இது ஒரு சங்கடமான தருணம்!
உண்மையான தாழ்மைக்கு அருகில் இருப்பது சங்கடமாக இருக்கலாம், ஏனென்றால் அது நம்முடைய இருதயங்களில் நாம் இன்னமும் பெருமையைப் பற்றிக் கொண்டிருக்கிற அல்லது ஒருவித உயர்வான நிலையை உணரும் பகுதிகளை வெளிப்படுத்துகிறது. உண்மையான தாழ்மையிலிருந்து வெளிப்படும் எதிர்பாராத கனிவு, புரிதல் மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றை நாம் சந்திக்கும்போது, அது பேதுருவுக்கு நேர்ந்தது போலவே நம்மையும் திகைக்க வைக்கிறது.
ஆனால் இங்கே ஒரு முரண்பாடு உள்ளது: தாழ்மை நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், அது நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சியானது. தாழ்மை குணம் உள்ளவர்களுடன் பழகுவது எளிது. அவர்கள் எளிதில் புண்படுவதில்லை, தன்னைப் பற்றி மட்டுமே அலைபாய்பவர்கள் இல்லை, மாறாக மற்றவர்கள் மீது உண்மையான அக்கறை காட்டுபவர்கள்.
தாழ்மையானவர்களின் மிக கவர்ச்சியான நிலை என்னவென்றால், அவர்கள் விடுதலைப்பெற்றவர்கள்.
சண்டை சச்சரவுகளிலிருந்து விடுபட்டவர்கள். பெருமையிலிருந்து விடுபட்டவர்கள். சுயநல ஆசையிலிருந்து விடுபட்டவர்கள்.
அந்த விடுதலைக்காக இயேசு ஏற்கனவே விலை கொடுத்துவிட்டார்:
“ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.” – கலாத்தியர் 5:1
பெருமை, அகந்தை மற்றும் கோபம் ஆகியவை தாழ்மைக்கு நேரெதிரானவை, மேலும் அவை நம்மை அடிமைப்படுத்தும் ஒரு நுகமாக மாறக்கூடும்.
கோபம் உங்களைத் திடீரென்று மேற்கொண்டதுண்டா? அல்லது உங்கள் அகந்தை குறுக்கே வந்ததுண்டா? அவை நம்மை ஆதிக்கம் செலுத்தும் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த குணாதிசயங்கள். நாம் அனுமதித்தால் அவை நம்மைப் பிடித்துக்கொள்ளும்.
மறுபுறம், தாழ்மையும் அதிலிருந்து வெளிவரும் அழகான பலன்களும் ஒரு தேர்வு.
"ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு." – கொலோசெயர் 3:12
உங்களைத் "தரித்துக்கொள்வது" தானாக நடக்காது; உங்கள் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது போன்ற முயற்சி அதற்குத் தேவை. தாழ்மைக்கும் அதுவே உண்மை; அதை நீங்கள் முழுமனதோடு தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்கள் தாழ்மையின் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுப்பீர்களா அல்லது பெருமை மற்றும் கோபத்தின் நுகத்தைத் தேர்ந்தெடுப்பீர்களா? அது உங்கள் கையில் உள்ளது!