உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இருக்கிறதா?
என் அண்ணன் மற்றும் அக்காளின் பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தபோது, அவர்களுடன் நான் செய்த பிடித்தமான செயல்களுள் ஒன்று, அவர்களை என் கரங்களுக்குள் குதிக்க வைப்பது. உதாரணமாக, மேசை, சோபா அல்லது நீச்சல் குளத்தின் விளிம்பிலிருந்து.
நான் அவர்களைப் பிடித்துக் கொள்வேன் என்று தெரிந்து, அவர்கள் ஒரு கணமும் தயங்காமல் குதிப்பார்கள்.
அவர்களின் அந்தக் சந்தேகமின்றி நம்பிக்கையில் ஏதோவொரு அழகு இருக்கிறது. குழந்தைகள் ஒரு கால்குலேட்டரை எடுத்து, வாய்ப்புகளை அளவிடவோ அல்லது ஒரு மாற்றுத் திட்டத்தைக் கேட்கவோ மாட்டார்கள். அவர்கள் குதிக்கிறார்கள் - ஏனென்றால் நம்பிக்கை என்பது அவர்களின் இயல்பான நிலைப்பாடு.
இதுபோன்ற நம்பிக்கையை கொண்டிருக்கத்தான் தேவன் நம்மை அழைக்கிறார் : குழந்தையைப் போல நம்பிக்கை.
"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு।" – நீதிமொழிகள் 3:5
குழந்தைகள் குதிக்கும்போது கவலைப்படாமல் இருப்பது மட்டுமல்ல. அவர்கள் எதைப் பற்றியும் அதிகம் கவலைப்படுவதில்லை. தங்கள் பெற்றோர்கள் தங்களுக்கு உணவளிப்பார்கள், பாதுகாப்பார்கள், கவனித்துக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தேவன் நம்மை, அவருடைய பிள்ளைகளை, மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்கிறார். எனவே நாம் கவலைப்படத் தேவையில்லை:
“ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் [....] ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரிரிய அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” – மத்தேயு 6:25-27
குழந்தையைப் போல இருப்பது என்றால், உங்கள் வாழ்க்கை, உங்கள் தேவைகள், உங்கள் பயங்கள், உங்கள் எதிர்காலம், உங்கள் பதிலளிக்கப்படாத ஜெபங்கள், மற்றும் உங்கள் பலவீனமான நம்பிக்கைகள் ஆகியவற்றின் முழு பாரத்தையும் அவருடைய கரங்களில் வைப்பதாகும். வானத்தில் நட்சத்திரங்களை மிதக்கவிட்டு, சமுத்திரங்களை அவற்றின் இடத்தில் வைத்திருக்கும் அதே தேவன் உங்களையும் தாங்குகிறார், அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று விசுவாசிப்பதே அது.
ஆகவே, தேவன் இன்று விரும்புகிற அந்தக் குழந்தையைப் போன்ற, எளிமையான விசுவாசத்துடன் அவரை நம்ப நீங்கள் இன்று தெரிந்துகொள்வீர்களா?
ஜெபத்தில் அவரிடம் சொல்லுங்கள்.