அதிகம் பேசாதே!
நான் மக்களை நேசிக்கிறேன், மேலும் நான் நிச்சயமாக ஒரு வெளிப்படையான ஆள் (extrovert); கூட்டங்கள் மற்றும் குழு அமைப்புகளிலிருந்து நான் பெலன் பெறுகிறேன். இருப்பினும், சில சமயங்களில் நான் இன்னும் பொறுமையாகவும், சிறந்த செவிகொடுப்பவராகவும் இருக்க விரும்புகிறேன். மக்கள் அதிகம் பேசும்போது, நான் கவனத்தை இழந்துவிடுவேன். குறைவான வார்த்தைகளால் அதிகம் சொல்லக்கூடியவர்களை நான் பாராட்டுகிறேன்.
இயேசுவின் தாயான மரியாள் அப்படித்தான் என்று நினைக்கிறேன்: என் இருதயத்திற்குப் பிடித்தமான ஒரு பெண்.
அவள் காரியங்களைத் தன் இருதயத்தில் சேமித்து வைக்கும் பழக்கம் உடையவள் (லூக்கா 2:19 மற்றும் லூக்கா 2:51), மேலும் காபிரியேல் அவளுக்கு மாசற்ற கருத்தரிப்பைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்தபோது, அவள் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அதற்குப் பிறகு எளிமையாக, “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” (லூக்கா 1:38) என்று பதிலளித்தாள்.
ஆனால் அவள் வாயைத் திறந்தபோது (லூக்கா 1:46-55), அவளுடைய உதடுகளில் இருந்து துதியும் நன்றியுமே வழிந்தோடியது:
என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தாரே. இதோ, இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுள்ளவர் எனக்குப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள்மேல் அவருடைய இரக்கம் தலைமுறை தலைமுறையாக இருக்கும். தமது புயத்தினாலே பராக்கிரமம் செய்து, இருதயத்தின் நினைவில் அகந்தை கொண்டவர்களைச் சிதறடித்தார். ஆளுகிறவர்களைச் சிங்காசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நற்காரியங்களால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்குமென்றென்றைக்கும் இரக்கங்காட்டி, தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்கு உதவி செய்தார்.
நான் ஜெபிப்பதை விட அல்லது துதிப்பதைப் விட அதிகமாகப் பேசுகிறேன் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நானும் மரியாளைப் போல: குறைவான வார்த்தைகள், அதிக துதி—இப்படி மாறுவதன் மூலம் பயனடையலாம்.நீங்கள் எப்படி?