• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 22 ஜனவரி 2026

மறப்பதிலும் நினைப்பதிலும் உள்ள விசித்திரம்!

வெளியீட்டு தேதி 22 ஜனவரி 2026

வாழ்க்கையில் ஒரு விசித்திரமான முரண்பாடு உண்டு: நல்ல விஷயங்களை நாம் எவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுகிறோம், ஆனால் கசப்பான விஷயங்களை எவ்வளவு எளிதாக நினைவில் வைத்திருக்கிறோம்!

யாராவது ஒருவர் சொன்ன ஒரு காயப்படுத்தும் வார்த்தையை ஒருவன் மறக்க வேண்டுமென்றால், அந்த நினைவை அழிக்க மற்றவர் குறைந்தது பத்து பாராட்டுகளையாவது சொல்ல வேண்டும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தாவீது & கோலியாத் கதையை நான் பார்க்கும்போது, கோலியாத்தை எதிர்க்க பயந்து நின்ற மற்ற வீரர்களிடமிருந்து தாவீதை வேறுபடுத்திக் காட்டிய ஒரு முக்கியமான விஷயம் இதுதான் என்று நான் நம்புகிறேன்: தாவீது தனது கடந்த கால வெற்றிகளை நினைவில் வைத்திருக்கத் தீர்மானித்தான்.

கோலியாத்துடன் போரிட தாவீதுக்கு தகுதியில்லை என்றும், அவன் சிறியவன் என்றும் சவுல் ராஜா சொன்னபோது, தாவீது அதற்குப் பதிலாக:

"ஒரு விசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; [...] அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்" – 1 சாமுவேல் 17:33-36

சவுலின் ஒட்டுமொத்த இராணுவத்திலும், இதற்கு முந்தைய போர்களில் பெரிய வெற்றிகளைக் கண்ட அனுபவம் வாய்ந்த வீரர்களே இல்லை என்று நம்மால் நினைக்க முடியாது. ஆனால், சவுல் உட்பட அவர்கள் அனைவரும் கோலியாத்தைக் கண்டு மிகவும் பயந்திருந்தார்கள் என்று நாம் வாசிக்கிறோம் (1 சாமுவேல் 17:11).

தாவீது கோலியாத்தின் மிரட்டலான பலத்தின் மேல் கவனம் செலுத்தாமல், தேவனுடைய உண்மையுள்ள தன்மையின் மேல் கவனம் செலுத்தத் தீர்மானித்தான். சிங்கத்தையும் கரடியையும் கொல்ல தேவன் அவனுக்கு உதவியிருந்தார்; நிச்சயமாக கோலியாத்தை வீழ்த்தவும் அவர் உதவுவார் என்று அவன் நம்பினான்.

பவுல் இதே போன்ற ஒரு மனநிலையைத் தான் கொண்டிருந்தார், அவர் இவ்விதமாக எழுதினார்:

"நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுது தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்." – 2 கொரிந்தியர் 1:9-10

இன்று ஒரு நிமிடம் உங்கள் கடந்த கால வெற்றிகளை சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய உண்மையுள்ள தன்மையை நீங்கள் அனுபவித்த தருணங்கள் எவை?

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.