• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 24 ஜனவரி 2026

இக்கரைக்கு அக்கரை பச்சை...

வெளியீட்டு தேதி 24 ஜனவரி 2026

நீங்கள் ஒரு அதிசயம்!

"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்ற பழமொழியை நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மற்றவர்களிடம் இருப்பவை—அவர்களுடைய திறமை, வாய்ப்புகள், பணம் அல்லது நண்பர்கள்—நமக்கும் கிடைத்துவிட்டால் நம் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைப்பது இயல்பு. ஆனால், நம் கையில் என்ன இருக்கிறதோ, அதையே தேவன் தம்முடைய மகிமைக்காகப் பயன்படுத்துகிறார் என்பதை வேதாகமம் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம், தாவீது கோலியாத்தை எதிர்கொண்ட விதம் (1 சாமுவேல் 17).

தனது வீரர்கள் அனைவரும் பயந்து ஓடும் அளவுக்கு (1 சாமுவேல் 17:24) தங்களை மிரட்டிக்கொண்டிருந்த அந்த இராட்சத கோலியாத்தை எதிர்க்க, கடைசியாக ஒரு மனிதன் முன்வந்துவிட்டான் என்று சவுல் கேள்விப்பட்டபோது, அவர் சொன்னார்:

"போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான். சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான். அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டான்." 1 சாமுவேல் 17:37-39

ஒரு ராஜாவின் கவச உடை என்பது நிச்சயமாக மிகச் சிறந்த ஒன்றாகத்தான் இருந்திருக்கும். கோலியாத்தை எதிர்கொள்ள மிகச் சிறந்த தற்காப்பு உடை வேண்டும் என்று தாவீது நினைத்திருப்பது நியாயமானதுதான். அவன் அதை அணிந்து பார்க்கிறான், ஆனால் அது அவனுக்கு பொருந்தவில்லை.

கதை தொடரும்போது, தாவீது தனது தடியைக் கையில் எடுத்துக்கொண்டு கோலியாத்தை நெருங்குகிறான், தனது கவண் கல்லால் அவனைக் கொல்கிறான். இந்த எளிய தோற்றம் தான் கோலியாத்து தாவீதை மிகவும் அலட்சியமாக நினைக்க காரணமாக இருந்திருக்கலாம்; ஒருவேளை அந்த அலட்சியமே தாவீதுக்கு சாதகமாக அமைந்திருக்கலாம்.

அது நமக்கு திட்டவட்டமாகத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நமக்குத் தெரியும்: நம் கையில் இருப்பது நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ மிகச் சிறியதாக தோன்றினாலும், தேவன் அதையே பயன்படுத்துகிறார்.

உங்கள் கையில் இப்போது என்ன இருக்கிறது?

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.