• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 28 ஜனவரி 2026

ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது! 🤯

வெளியீட்டு தேதி 28 ஜனவரி 2026

ஜெனியும் நானும் எங்கள் குழந்தைக்கு ஒரு பொருத்தமான பெயரைத் தேடுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டோம் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த ஒன்பது மாத காலத்தில் ஆயிரக்கணக்கான பெயர்களைப் பார்த்திருப்போம். இறுதியில் 'ஜாக் விஹான் மென்டிஸ்' (Zac Vihaan Mendes) என்ற பெயரைத் தேர்வு செய்தோம்.

ஆனால், அவன் பிறந்த பிறகு அவனைப் பார்த்தபோது நான் ஜெனியிடம், "விஹான் என்ற பெயர் இவனுக்கு பொருந்தவே இல்லை!" என்று சொன்னேன். அவ்வளவுதான், நாங்கள் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டோம். அவனுக்கு ஒரு புதிய நடுப்பெயரைத் தேட வேண்டியிருந்தது. 🙈

கடைசியாக, 'சானன் ' (Chanan) என்ற பெயரைக் கண்டுபிடித்தோம், அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் முதல் மூன்று நாட்களை அவன் வெறும் 'ஜாக்' மட்டும்தான். நாங்கள் ஒரு முடிவெடுத்து, அவனை முழுப் பெயரோடு அழைத்த அந்தத் தருணம் மிகவும் அற்புதம்! 🥰

வேதாகமத்தில் தேவன் ஒரு பெயரால் முதன்முதலில் அழைக்கப்படும் இடம் ஆதியாகமம் 16:13-ல் உள்ளது:

"அப்பொழுது அவள் [ஆகார்]என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள்." – ஆதியாகமம் 16:13

அவள் தேவனுக்குக் கொடுத்த பெயர் 'எல் ரோயி' (El Roi) — அதாவது என்னைக் காண்கிற தேவன்.

இது எவ்வளவு அழகு, பார்த்தீர்களா? நாம் நம்மை பார்க்கிற ஒரு தேவனை சேவிக்கிறோம்! அவர் நம்மை போன்ற சாதாரண ஊழியர்களை கவனிக்க முடியாத அளவுக்குப் பெரியவரோ அல்லது வேலையாக இருப்பவரோ அல்ல. நம் ஒவ்வொரு மகிழ்ச்சியையும், ஒவ்வொரு கண்ணீரையும், ஒவ்வொரு அமைதியான ஜெபத்தையும் அவர் காண்கிறார்.

1 இராஜாக்கள் 18-ம் அதிகாரத்தில், எலியா மற்றும் பாகால் தீர்க்கதரிசிகளுக்கு இடையேயான ஒரு வியக்கத்தக்க கதையை நாம் வாசிக்கிறோம். பரலோகத்திலிருந்து நெருப்பை அனுப்பும்படி இரு தரப்பினரும் தங்கள் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார்கள். பாகால் தீர்க்கதரிசிகள் பல மணிநேரம் பலிபீடத்தைச் சுற்றி ஆடிக்கொண்டு கூக்குரலிட்ட பிறகு, எலியா அவர்களைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்:

"மத்தியானவேளை எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருக்கும்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்." – 1 இராஜாக்கள் 18:27

அவர்கள் தங்கள் தேவனின் கவனத்தை ஈர்ப்பதற்காக உரக்கக் கத்தியும், பட்டயங்களாலும் ஈட்டிகளாலும் தங்களையே கீறிக்கொண்டும் ஜெபித்தார்கள். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை:

"மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை." – 1 இராஜாக்கள் 18:29

பாகாலுக்கு எவ்வளவு முரண்பட்டவர் நம்முடைய தேவன்! ஆகாரின் தேவனான 'எல் ரோயி', நம்மை பார்க்கிற தேவன்! ஆகார் எந்தவொரு சாகசங்களையும் செய்யவில்லை, தேவனே அவளைத் தேடிப் வந்தார். அவளுடைய வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டத்தில், அவளைக் காண்கிற தேவனை அவள் சந்தித்தாள்.

அவர் உங்களையும் காண்கிறார்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.