எந்தத் தவறு உங்களை துரத்துகிறது?
கடந்த காலத் தவறுகள் உங்களை இன்னும் வேதனைப்படுத்துகின்றனவா? அவற்றை எண்ணிப் பார்க்கையில் ஒருவித குற்றவுணர்ச்சி உங்களை வாட்டுகிறதா? பொதுவாக நம் அனைவருக்கும் இத்தகைய அனுபவம் இருக்கலாம்.
வெற்றிகளைக் காட்டிலும் நமது தோல்விகளையும் தவறுகளையுமே நாம் அதிகம் நினைவில் கொள்கிறோம். நடந்தவற்றை மாற்றியிருக்கலாமே என்ற ஏக்கத்தில், அவற்றையே மீண்டும் மீண்டும் சிந்திக்க தலைப்படுகிறோம். நாம் செய்த ஒரு தவறிலேயே மனதை உழல விடுவது எளிதான ஒன்று. அதைப் பற்றி வருந்துவதால் அந்த நிகழ்வின் விளைவை மாற்றிவிடலாம் அல்லது அந்த சம்பவத்தையே துடைத்துவிடலாம் எனத் தவறாக எண்ணுகிறோம். இது உங்களுக்கு பழக்கமான ஒன்றாக தோன்றிறதா?
மகிழ்ச்சியின் செய்தி என்னவென்றால், தேவன் நமது கடந்த காலத் தவறுகளை நினைவுகூர்வதில்லை — அதற்கு அவருக்கு ஆற்றல் இல்லை என்பதல்ல, அவர் அவற்றினை நினையாதிருக்கத் திருவுளம் கொள்கிறார்.
“நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.” — ஏசாயா 43:25
ஆண்டவரே நமது மீறுதல்களை நினையாதிருக்கையில், நாம் ஏன் அவற்றைச் சுமக்க வேண்டும்?
"மேற்குக்கும், கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்." — சங்கீதம் 103:12
இறைவன் நமது பிழைகளை மறப்பது மட்டுமல்ல, அவற்றை நம்மை விட்டு முற்றிலுமாக அப்புறப்படுத்துகிறார். அவ்வாறிருக்க, அந்த நினைவுகள் நம்மை மீண்டும் மீண்டும் அச்சுறுத்துவதற்கு நாம் ஏன் இடமளிக்க வேண்டும்? நாம் அவ்வாறு செய்யலாகாது!
இந்த நமது கடந்த காலத் தவறுகளை துறந்து, தேவன் அவற்றை என்றென்றும் துடைத்தழிக்க நாம் இடங்கொடுக்க வேண்டிய தருணம் இது. இது எவ்வாறு சாத்தியம்? அவற்றை ஆண்டவரிடம் ஒப்புக்கொண்டு, எஞ்சியவற்றை அவர் கரத்தில் ஒப்படிப்பதன் வழியாகவே:
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." — 1 யோவான் 1:9
வாருங்கள், நாம் இணைந்து வேண்டிக்கொள்வோம்.
பரலோகத் தந்தையே, நான் _________ எனும் இந்தத் தவறினைச் செய்துள்ளேன், இது என் உள்ளத்தில் பாரமாக உள்ளது. இன்று நான் இதனை அறிக்கையிட்டு, இதிலிருந்து விடுபடுகிறேன்; இதனை என்றென்றும் துடைத்தழிக்க உம்மிடம் மன்றாடுகிறேன். என் பாவங்களை மன்னித்து, எல்லா அநீதியிலிருந்தும் என்னைச் தூய்மைப்படுத்துவீரா. உமக்கே ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.