நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்?
நான் முதன்முதலில் என் கணவரை சந்தித்தபோது, அவர் ஒரு புகழ்பெற்ற ஆராதனைத் தலைவர் என்று எனக்குத் தெரியாது. அவர் தனது தந்தையின் சபையில் ஆராதனையை வழிநடத்துகிறார் என்பது எனக்குத் தெரியும், மேலும் அவர் திறமைசாலி என்பதையும் என்னால் உணர முடிந்தது. ஆனால் நான் ஹிந்தி ஆராதனைப் பாடல்களை கேட்பதில்லை என்பதால், அவருடைய இசையைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை.
இரண்டு வருடங்களாக நான் கேம்ரனை அறிந்திருந்த நிலையில், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் நடந்த 'Yeshua Ministries' கச்சேரியில் நான் கலந்துகொண்டேன். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர், மேலும் கேம்ரன் மேடைக்கு வந்தபோது அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அதன்பிறகு, அவருடன் புகைப்படம் எடுக்கவும் கையெழுத்து வாங்கவும் பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது. "யார் இந்த நபர்??" என்று நானே வியந்து கேட்டேன். அவருடைய முற்றிலும் மாறுபட்ட ஒரு பக்கத்தை நான் அன்றுதான் கண்டேன். 🥰
இயேசு அழைத்த காலத்திலிருந்து அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வரை, சீடர்கள் சுமார் மூன்று ஆண்டுகள் அவருடன் செலவிட்டனர். இயேசு செய்த அனைத்தையும் அவர்கள் கண்டார்கள், அவருடைய போதனைகள் அனைத்தையும் கேட்டார்கள்.
அந்தக் காலப்பகுதியின் இறுதியில், அவர் அவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறார்:
"'மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்." – மத்தேயு 16:13-15
இயேசு உங்களிடமும் இதே கேள்வியைத் தான் கேட்கிறார்.
இக்காலத்தில் சிலர் அவர் ஒரு குரு என்று சொல்கிறார்கள், மற்றவர்கள் அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது ஒரு வரலாற்று நபர் மட்டுமே என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் என்ன நம்புகிறீர்கள்?
மத்தேயு 16:16-17-ல் இயேசு பாக்கியமானது என்று கருதிய பதிலைப் பார்ப்பதற்கு முன்பாக, இந்தக் கேள்விக்கு நீங்களாகவே பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் பதில் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததா? கவலைப்பட வேண்டாம், ஜெபம், வேதாகமம் மற்றும் பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசுவைப் பிதாவினுடைய குமாரனாக உங்களுக்கு வெளிப்படுத்துமாறு உங்கள் பரலோகத் தந்தையிடம் கேளுங்கள்.
சீடர்களைப் போலவே நீங்களும் தொடர்ந்து இயேசுவோடு நடக்கும்போது, அவரை இன்னும் சிறப்பாக அறிந்து கொள்வீர்கள்.