• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 21 மார்ச் 2026

இந்த மனிதர்களை எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது!

வெளியீட்டு தேதி 21 மார்ச் 2026

இந்த வாரம், தேவனிடம் வெளிப்படையாக நேர்மையுடன் இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் கவனித்து வருகிறோம்.

தேவன் மீது வெளிப்படையான மற்றும் தொகுக்கப்படாத ஜெபங்களின் வரிசையைப் பொழிவது அவபக்தியாகவோ அல்லது அவமரியாதையாகவோ உணரப்படலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய தேவன் ஒரு பரிசுத்த தேவன், மேலும் அவருக்குப் பயந்திருக்கும்படி வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது (பிரசங்கி 12:13).

நம்முடைய கிறிஸ்தவ விசுவாசத்தின் அழகான முரண்பாடுகளில் ஒன்று என்னவென்றால், தேவன் பூமியின் ராஜாவாகவும் (சங்கீதம் 47:7) மற்றும் நெருக்கமான, உயிர் நண்பராகவும் (நீதிமொழிகள் 18:24) இருக்கிறார்.

மோசே இதை மற்ற அனைவரையும் விட நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்.

வேதாகமத்தில் உண்மையில் தேவனைக் கண்ட மிகச் சிலரில் ஒருவராக இருந்த அவர், தேவனுடன் ஒரு சிறப்பான உறவைக் கொண்டிருந்தார். மோசே ஒரு கன்மலையின் வெடிப்பில் இருந்தபோது தேவனுடைய மகிமை அவரைக் கடந்து சென்றது. ஆனால் மோசேயின் உயிரைக் காப்பதற்காக, தேவன் அவரை மூடினார், அதனால் மோசேயால் அவருடைய பின்புறத்தை மட்டுமே பார்க்க முடிந்தது, ஏனென்றால் எந்த மனுஷனும் தேவனுடைய முகத்தைக் கண்டு உயிரோடிருக்க முடியாது (யாத்திராகமம் 33:21-23).

மோசே தேவனைக் கண்ட பிறகு, அவர் மீது மோசே கொண்டிருந்த பயபக்தி சந்தேகத்திற்கு இடமின்றி மாறியது, ஆனால் அவர்களது உறவும் மாறியது - அது இன்னும் தனிப்பட்டதாகவும் நெருக்கமானதாகவும் மாறியது.

தேவனுடைய மகத்துவம் அவரை அணுக முடியாதவராகவோ அல்லது நெருங்க முடியாதவராகவோ மாற்றவில்லை.

தேவனுடைய மகிமையை மிக அருகில் பார்த்திருந்த போதிலும், மோசே இன்னும் தேவனிடம் ஒரு நண்பனைப் போல பேசுகிறார், இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதில் உள்ள விரக்திகளை அவரிடம் பகிர்ந்து கொள்கிறார். தான் யாரிடம் பேசுகிறோம் என்பது வரலாற்றில் வேறு எவரையும் விட மோசேக்கு நன்றாகத் தெரிந்திருந்தது, ஆனால் அவர் எதையும் மறைக்கவில்லை:

“இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது. உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்”.எண்ணாகமம் 11:14-15 

மோசேயைப் போல, நீங்கள் தேவனிடம் பேசும்போது எதையும் மறைக்க வேண்டாம். உங்கள் விரக்திகளை அவரால் கையாள முடியும்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.