• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 25 மார்ச் 2026

தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருந்த அந்த நபர்கள் யார்?

வெளியீட்டு தேதி 25 மார்ச் 2026

நேற்று, நாம் இந்தக் கேள்வியுடன் முடித்தோம்: "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்" (லூக்கா 23:34) என்று இயேசு சொன்னபோது அவர் யாரைக் குறிப்பிட்டிருப்பார்?

அவரைப் பிடித்தவர்களையா, அவரைத் துன்புறுத்தியவர்களையா அல்லது ஒருவேளை அவரைக் கைவிட்டுச் சென்ற அவருடைய நண்பர்களையா?

நீங்கள் சிந்திக்க வேண்டிய மற்றொரு சாத்தியக்கூறு இதோ... இயேசு உங்களையும் என்னையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் என்ன?

எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பாவமன்னிப்பிற்காகவே இயேசு சிலுவையில் மரிக்க வேண்டியிருந்தது:

"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணிறார்." (ரோமர் 5:8

மேலும்:

"நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்." 1 பேதுரு 2:24 

இயேசு சிலுவையில் மரித்துக் கொண்டிருந்தபோது, அவர் பிதாவிடம் கேட்டது நம்முடைய மன்னிப்பையே.

சிலுவையில் இயேசு அனுபவித்த தாங்க முடியாத வேதனையை நினைப்பதும், நம்முடைய பாவங்கள்தான் அவரை அங்கே நிறுத்தியது என்பதை உணர்வதும் ஒரு குற்ற உணர்வைத் தூண்டலாம். ஆனால் இங்கே மிகவும் அழகான பகுதி என்னவென்றால்: இயேசு சிலுவையில் இருந்தபோது, அவருக்கு முன்பாக இருந்த ஒரு சந்தோஷம் அந்த உபத்திரவத்தைச் சகிக்க அவருக்கு உதவியது:

"அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து..."எபிரெயர் 12:2

நீங்களும் நானும் தான் அந்த சந்தோஷம்! நமக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு ஒப்புரவாகுதல் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பே இயேசு சிலுவையை சகிக்கத் தூண்டியது (2 கொரிந்தியர் 5:18). 

நம்முடைய பாவங்கள் பெரிதாக இருக்கலாம், ஆனால் நம்மீது அவர் வைத்துள்ள அன்பு அதைவிடப் பெரியது.

நீங்கள் இதுவரை இதைச் செய்ததில்லை என்றால், இன்று இந்த எளிய ஜெபத்தின் மூலம் உங்கள் பாவங்களுக்கான இயேசுவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்களாக:

“ஆண்டவராகிய இயேசுவே, உம்மை என் வாழ்வின் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு பாவி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், நீர் என் பாவங்களுக்காக மரித்தீர் என்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். எனது பழைய வழிகளை விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றுபவராக மாற எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.