• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 5 ஏப்ரல் 2026

உயிர்ப்பு ஞாயிறு வாழ்த்துக்கள்!

வெளியீட்டு தேதி 5 ஏப்ரல் 2026

உங்களுக்கு இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகளையும் ஆசீர் வதிக்கப்பட்ட உயிர்த்தெழுதல் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.🌄

இயேசு நமக்காக மரித்த போதிலும், அவர் மரித்தவராகவே இருக்காமல், மீண்டும் உயிர்த்தெழுந்து மரணத்தை என்றென்றைக்குமாக வென்றார் என்பதை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

மரணம் வெற்றியாக விழுங்கப்பட்டது. “மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”.1 கொரிந்தியர் 15:54-57

இயேசுவின் மரணம் நம்முடைய மீட்பிற்கு அவசியமாக இருந்தது, ஆனால் அவருடைய உயிர்த்தெழுதல் தான் உண்மையான அற்புதம்: ஏனென்றால் அது மரணத்தின் மீதும் தேவனுக்கு இருக்கும் வல்லமைக்குச் சாட்சியளிக்கிறது.

“அவர் (கிறிஸ்து) பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.”  – 2 கொரிந்தியர் 13:4

நமக்கும் மரித்தப்பின் மீண்டும் உயிர்த்தெழும் பாக்கியம் உண்டு. நம்முடைய பழைய, மாம்ச மற்றும் பாவ சுபாவத்தை நாம் சாகடித்து, கிறிஸ்துவுக்குள் புதிய, உயிர்த்தெழுந்த ஜீவனைப் பெற முடியும். இயேசுவைப் போல நாம் இதை நேரடியாகச் சிலுவையில் செய்வதில்லை, ஆனால் ஞானஸ்நானத்தின் மூலம் அடையாளப்பூர்வமாகச் செய்கிறோம்:

“மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.”ரோமர் 6:4

சில ஆண்டுகளுக்கு முன்பு, உயிர்த்தெழுதல் ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 100 பேருக்கு ஞானஸ்நானம் வழங்கப்பட்ட ஒரு ஆராதனைக்கு ஜெனியும் நானும் சென்றோம். ஆராதனை நடந்துகொண்டிருந்தபோது, ஒன்றன்பின் ஒருவராக ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டிருந்தார்கள்; இயேசுவின் உயிர்த்தெழுதலை நான் கொண்டாடியதிலேயே அது மிகவும் வல்லமைமிக்க கொண்டாட்டமாக இருந்தது.

நீங்கள் ஒரு விசுவாசியாக இருந்தும், இதுவரை ஞானஸ்நானம் எடுக்கவில்லை என்றால், இந்த உயிர்த்தெழுதல் ஞாயிறு அன்று அந்தப் படியை எடுக்க முயற்சி செய்யும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களை எது தடுத்து நிறுத்துகிறது?

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.