• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 18 ஏப்ரல் 2026

நான்தான் ஏற்கனவே ஒரு மகனாச்சே! 🤔

வெளியீட்டு தேதி 18 ஏப்ரல் 2026

சகேயுவின் கதையை நாம் ஆறாவது நாளாகத் தொடர்ந்து தியானித்து வருகிறோம்; கதையின் இறுதியில் இயேசு கூறும் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை இன்று நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்:

“இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.”லூக்கா 19:9

இயேசு திடீரென்று ஆபிரகாமை இந்த உரையாடலில் கொண்டு வருவது சற்றே தொடர்பற்றது போலத் தோன்றலாம். சகேயு ஒரு எபிரெய மனுஷனாக இருந்ததால், அவன் ஏற்கனவே ஆபிரகாமின் சந்ததியாகத்தான் கருதப்பட்டிருப்பான். அந்த நாளில் நடந்த நிகழ்வுகளுக்கும் – சகேயுவின் மனந்திரும்புதலுக்கும் – அவனுடைய வம்சாவளிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

ஆனால் இயேசு எதைக்குறிப்பிடுகிறார் என்பதை அவருடைய சீஷர்கள் சரியாக அறிந்திருந்திருப்பார்கள். யோவான் 8-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யூத மதத் தலைவர்களுடன் இயேசு நடத்திய உரையாடலை அவர்கள் நினைவுகூர்ந்திருப்பார்கள்.

இயேசு அந்தத் தலைவர்களிடம் இவ்வாறு கூறுகிறார்:

“நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.”யோவான் 8:31-32

அதற்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள்:

“நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.”யோவான் 8:33

அவர்கள் ஆபிரகாமின் சந்ததியினராக இருந்தபோதிலும், அவர்கள் இன்னும் பாவத்திற்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள் என்றும், அடிமைகள் சுதந்திரமானவர்கள் அல்ல என்றும் இயேசு தொடர்ந்து விளக்குகிறார். குமாரர்களே சுதந்திரமானவர்கள். அவர்கள் புத்திரசுவிகாரத்திற்குள் பிரவேசிக்க இயேசு அவர்களை விடுதலையாக்க வேண்டும் (யோவான் 8:34-36).

சகேயு இப்போது ஆபிரகாமுக்கு ஒரு குமாரன் என்று இயேசு சொல்லும்போது, இயேசுவின் மீதான அவனுடைய விசுவாசம் அவனை அவனுடைய பாவங்களிலிருந்து விடுதலையாக்கிவிட்டது என்று அர்த்தம்.

அது உங்களுக்கும் பொருந்தும்:

“ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.”கலாத்தியர் 4:7

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.