பாலிவுட்டின் மிகச்சிறந்த அடையாளமாகத் திகழும் பின்னணி
'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' (DDLJ) மற்றும் 'சாந்தினி' போன்ற பழைய பாலிவுட் திரைப்படங்களில் பச்சை வயல்களும், பனி மூடிய சிகரங்களும் கொண்ட அழகான மலைக் காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அந்தக் காட்சிகள் அனைத்தும் ஐரோப்பாவிலுள்ள சுவிட்சர்லாந்து என்ற சிறிய, அழகான நாட்டில் படமாக்கப்பட்டவை. கடந்த ஆண்டு, என் கணவரும் நானும் சுவிட்சர்லாந்திற்குப் பயணம் செய்தோம், அது அவ்வளவு அற்புதமாக இருந்தது!
நாங்கள் இதுவரை கண்டிராத மிகவும் பிரமிக்க வைக்கும் மலைக் காட்சிகளுக்கு இடையே நடைப்பயணம் செய்தபோது, படைப்பின் அழகைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
இது சங்கீதம் 19:1-4 வரிகளை எனக்கு நினைவூட்டுகிறது:
“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும், அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் சொல்லுகிறது”.
நம்முடைய தேவன் அண்டசராசரத்தைப் படைத்தவர். அவரே மலைகளை அவற்றின் கம்பீரத்தோடும், கடல்களை அவற்றின் பரந்து விரிந்த தன்மையோடும், ஒரு பூவின் அதன் நுணுக்கமான விவரங்களோடும் படைத்தவர்.
தேவன் அவரது படிப்பின் மூலம் நம்மோடு பேசுவதை மிகவும் விரும்புகிறார்.
நான் இயற்கையோடு நேரம் செலவிடுகையில்தான் தேவனுடைய பிரசன்னத்தை மிகத் தெளிவாக உணர்ந்த மிக நெருக்கமான தருணங்களை அனுபவித்துள்ளேன்.
நிச்சயமாக, நம் வீட்டில் இருந்து மலைக் காட்சிகளை பார்ப்பதோ அல்லது அருகிலேயே நடைப்பயண பாதைகள் இருப்பதோ நம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் வானத்தில் பறக்கும் பறவைகளையோ அல்லது உங்கள் வீட்டிலுள்ள பூக்களையோ கவனிக்க ஒரு நிமிடம் ஒதுக்குவது கூட, தேவன் தனது மகிமையை உங்களுக்கு நினைவூட்ட ஒரு வாய்ப்பை உருவாக்கும்.
"ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?" – மத்தேயு 6:26