• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 9 ஜூன் 2026

வேதாகமத்தின் உச்சக்கட்ட அதிரடி நாவல் 📖

வெளியீட்டு தேதி 9 ஜூன் 2026

சில வேதாகமப் புத்தகங்கள் சுவாரசியமான ஒரு அதிரடிக் கதையைப் போல வாசிக்கத் தூண்டுகின்றன; அதில் சாத்தியமில்லாத ஒரு பணி, விறுவிறுப்பு, நல்லவர்கள், தீயவர்கள் என முழு சரித்திரமும் உங்களை அதோடு ஒன்றிப்போக வைக்கிறது. நெகேமியா அப்படிப்பட்ட புத்தகங்களுள் ஒன்றாகும்.   எருசலேமின் அலங்களை (மதில்களை) மீண்டும் கட்டுவதற்காக தேவனிடமிருந்து ஒரு பணியைப் பெற்ற கதாநாயகன் நெகேமியா. தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், குறைவான வளங்களைக் கொண்டும், எதிரிகளின் சூழ்ச்சிகளைத் தவிர்த்தும், நெகேமியாவும் அவனுடைய ஜனங்களும் ஆறே மாதங்களில் அலங்களைக் கட்டி முடித்தார்கள்!   நெகேமியாவின் சரித்திரத்திற்கும் இயேசுவின் சரித்திரத்திற்கும் இடையே பல ஒப்புமைகள் உள்ளன.   நெகேமியா ராஜாவின் அரண்மனையில் கனத்திற்கும் வசதிக்கும் உரிய ஒரு இடத்தில் பணியாற்றினான்; ஆனால் தன் ஜனங்கள் துன்பப்படுவதைக் கேள்விப்பட்டு, அவர்களுக்கு உதவுவதற்காக அவன் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தேர்ந்தெடுத்தான். அதே வழியில், இயேசு மனிதகுலத்தை இரட்சிப்பதற்காகக் கனமும் மகிமையும் பொருந்திய பரலோகத்தை விட்டு கீழே இறங்கி வந்தார்.

முந்தைய அதிபர்கள் ஏழைகளைச் சுரண்டி, அவர்கள் மேல் பாரமான வரிகளைச் சுமத்தியிருந்த இடத்தில், நெகேமியா ஏழைகளுக்கு உதவி செய்து அவர்களுடைய பாரத்தை இலகுவாக்கினான் (நெகேமியா 5:14-16).

அதேபோல், இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்:

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.” மத்தேயு 11:28-30   

நெகேமியா தன்னுடைய ஊழியக்காரத்துவத் தலைமையிலும், பாரங்களை இலகுவாக்குவதிலும், ஒடுக்கப்படுதலை நீக்குவதிலும், ஜனங்களை விடுவிப்பதிலும் இயேசுவை ஒத்திருக்கிறார். மதில்களின் வேலையை முடித்த பிறகு, நெகேமியா 12 ஆண்டுகள் எருசலேமிலே தங்கி, அந்தப் பகுதியின் மேல் ஒரு நீதியும் உத்தமமுமுள்ள அதிபதியாகப் பணியாற்றினார். பின்னர் அவர் ராஜாவினிடத்தில் பணியாற்றுவதற்காக எருசலேமை விட்டு திரும்பச் சென்றார். எவ்வாறாயினும், நெகேமியா இரண்டாம் முறையாக எருசலேமுக்குத் திரும்பி வருகிறார், அப்படி வரும்போது, அவர் நகரத்திலிருந்து தீமைகளை அகற்றுவதற்காக வருகிறார்.

அவர் தேவாலயத்தை சுத்திகரித்து, அதின் அறைகளைத் தூய்மைப்படுத்தி, தேவனுடைய ஆலயத்தை நிலைநிறுத்துகிறார் (நெகேமியா 5:14-16 மற்றும் நெகேமியா 13:6-9).   

இயேசுவும் மீண்டும் வரப்போகிறார்! அவர் வரும்போது, இந்த உலகத்திலிருந்து எல்லாத் தீமையையும் அகற்றுவார்!

“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”வெளிப்படுத்தின விசேஷம் 21:4

இது ஒரு சிறந்த எதிர்பார்ப்பு அல்லவா?

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.