அது கேட்பதற்கு சரியாக தோன்றவில்லை!
சில நேரங்களில் பழைய ஏற்பாட்டை, குறிப்பாக தீர்க்கதரிசன புத்தகங்களை வாசிப்பது சற்று கடினமாக இருப்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். புதிய ஏற்பாட்டை வாசிப்பதும், சீஷர்களின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்பதும் அல்லது இயேசு மலைப்பிரசங்கம் செய்வதை கேட்பது போலக் கற்பனை செய்வதும் மிகவும் எளிதானது.
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் (The Chosen) போன்ற அழகான திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் புதிய ஏற்பாட்டை நாம் இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக மாற்றியுள்ளன.
ஆனால் மீண்டும் பழைய ஏற்பாட்டிற்குத் திரும்பும்போது, சில சமயங்களில் விசித்திரமாகத் தோன்றும் ராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சரித்திரங்களுக்கு மத்தியிலும் கூட, அந்தப் பக்கங்களில் இயேசுவைக் கண்டறிய முடியும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
வேதாகமத்திலேயே அநேகமாக மிகவும் அசாதாரணமான இரண்டு தீர்க்கதரிசிகளான எலியா மற்றும் எலிசாவைப் பற்றி இன்று நாம் பார்ப்போம்.
எலியாவின் ஒட்டுமொத்த தீர்க்கதரிசன ஊழியமும் தீமைக்கும் விக்கிரகாராதனைக்கும் எதிராகப் போராடுவதை சுற்றியே அமைந்திருந்தது; உதாரணத்திற்கு, ஆகாப் ராஜா தேவனை விட்டுவிட்டுப் பாகாலை சேவித்தான் என்று அவன் மேல் குற்றம் சாட்டியது (1 இராஜாக்கள் 18:18), கர்மேல் மலையில் எலியாவிற்கும் பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேர் கொல்லப்பட்டது (1 இராஜாக்கள் 18:22-40) மற்றும் பொல்லாத ராணியான யேசேபேலுக்கு எதிராக அவர் உரைத்த தீர்க்கதரிசனம் (1 இராஜாக்கள் 21:23-26) ஆகியவை இதற்குச் சிறந்த சான்றுகளாகும்.
ஆண்டவரே, எலியாவிடம் அவனுக்கு பின்வாரிசாக எலிசாவை அபிஷேகம் செய்யும்படி கூறுகிறார் (1 இராஜாக்கள் 19:16). எலிசா எல்லாவற்றையும் விட்டுவிட்டு–தன் ஏரைச் சுட்டெரித்து, அநேகமாக தன் வருமானத்திற்கு ஒரே ஆதாரமாக இருந்த தன் மாடுகளை பலியிட்டு–எலியாவைப் பின்பற்றுகிறான். இது இயேசுவைப் பின்பற்றுவதற்காக தங்களது மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு வந்த சீஷர்களைப் போலவே இருக்கிறது.
எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு சற்று முன்பாக, அவனிடம் ஏதேனும் இறுதி கோரிக்கை இருக்கிறதா என்று எலிசாவிடம் கேட்கிறான். அதற்கு எலிசா: “உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன்.” என்று பதிலளித்தான் (2 இராஜாக்கள் 2:9).
எலியா அதற்கு ஒரு நிபந்தனையின் பேரில் அதைப் பெற்றுக்கொள்வாய் என்று கூறுகிறான்: எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் அந்தத் தருணத்தை எலிசா பார்க்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அன்றிலிருந்து எலிசா ஒரு கணம்கூடத் தன் எஜமானைத் தன் பார்வையை விட்டு விலக்கியிருக்க மாட்டான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்! 👀 அதுபோலவே அது சம்பவிக்கிறது: எலிசா எலியா எடுத்துக்கொள்ளப்பட்டதைக் கண்டு, பூமியில் தன் ஊழியத்தைத் தொடருகிறான்.
இயேசுவும் தீமையை வெல்வதற்காகவே இந்த பூமிக்கு வந்தார், ஆனால் அவர் அதை ஒரே தரம் மற்றும் எல்லாருக்காகவும் செய்து முடித்தார் (1 யோவான் 3:8); என்ன விலைக்கிரயம் கொடுத்தாவது தம்மைப் பின்பற்றும்படி அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார் (லூக்கா 14:27); அவர் நமக்குத் தம்முடைய ஆவியைத் தந்திருக்கிறார் (யோவான் 14:15-17) மற்றும் நாம் எல்லா நேரங்களிலும் நம்முடைய கண்களை அவர் மேல் மட்டுமே நோக்கமாக வைத்திருக்க வேண்டும் (எபிரேயர் 12:2).
எலிசா எலியாவின் சீஷனாக இருந்ததைப் போலவே, நீங்களும் நானும் இயேசுவின் சீஷர்களாக மாறுகிறோம். நீங்கள் அதற்கு தயாரா?