புகழ்பெற்ற கரானா ஜாக்கெட்🕺🏻
சமீபத்தில், கேம்ரன் ஒரு இசை வீடியோவிற்காக [insert link Gharana] வண்ணமயமான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட மிகவும் அருமையான ஜாக்கெட் ஒன்றை அணிந்திருந்தார். அந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது, அதே போல் அந்த ஜாக்கெட்டும் பிரபலமானது! கேம்ரனைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காகப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அதுபோன்ற ஜாக்கெட்டுகளை வாங்கும் வீடியோக்கள் வெளிவரத் தொடங்கின, அதோடு அதே ஜாக்கெட்டை வாங்க விரும்பிய மக்களின் கேள்விகளால் கேம்ரனுடைய இன்பாக்ஸ் நிறைந்தது.🥰
ஆதியாகமம் 37-ல் யோசேப்புக்கு அவனுடைய தகப்பன் கொடுத்த அழகான அங்கியைக் கற்பனை செய்யும்போது, அது கேம்ரனுடைய ஜாக்கெட்டைப் போல, ஆனால் அதைவிட ஆடம்பரமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை அது பல வண்ணங்களும் அழகான வேலைப்பாடுகளும் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.
நிச்சயமாக, அது எப்படி இருந்தது என்பதை நாம் அறிய வழி இல்லை, ஆனால் அது அவருடைய தகப்பன் யோசேப்பை அவனுடைய சகோதரர்களை விட அதிகமாக நேசித்தார் என்பதைத் தெளிவாகக் காட்டும் ஒரு ஆடம்பரமான பரிசாக இருந்தது.
இறுதியில், பொறாமையால் தூண்டப்பட்ட யோசேப்பின் மீதான அவர்களின் வெறுப்பு, அந்தச் சகோதரர்களை ஆட்கொண்டது, அவர்கள் யோசேப்பை அடிமையாக விற்கிறார்கள். யோசேப்பு ஒரு பிரியமான குமாரன் என்ற அடையாளத்தையும், ஒரு சுதந்திர மனிதனாக அவனுக்குரிய கண்ணியத்தையும், அவனுடைய மிக மதிப்புமிக்க சொத்தான அவனுடைய அழகான அங்கியையும் கூட இழக்கிறான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, சூழ்நிலைகள் முற்றிலும் தலைகீழாக மாறுகின்றன, யோசேப்பு இப்போது எகிப்தில் ஒரு ராஜாவாக இருக்கிறான்; அவன் தன் சகோதரர்கள் அனைவருக்கும் புத்தாடைகளை உடுத்த முடிகிறது (ஆதியாகமம் 45:22).
தேவனுடைய அன்பான குமாரனாகிய இயேசு சிலுவையில், முற்றிலும் நிர்வாணமாக, தம்முடைய கண்ணியத்தை இழந்து, தம்முடைய ஜீவனைக் கொடுக்கவிருந்த வேளையில், போர்ச்சேவகர்கள் அவருடைய ஆடைகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். இயேசுவின் அங்கியானது தையலில்லாமல் நெய்யப்பட்டிருந்ததால், அது மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது, எனவே அதை யார் எடுப்பது என்று சீட்டுப்போட அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் (யோவான் 19:23-24).
இப்போது இவற்றுக்கு இடையேயான தொடர்புகளை நீங்கள் காணத் தொடங்குகிறீர்களா?
யோசேப்பு தன் சகோதரர்களுக்கு ஆடைகளை உடுத்தியது உன்னதமான கிருபை மற்றும் மன்னிப்பின் அடையாளமாக இருந்ததைப் போல, இயேசுவும் நமக்கு புதிய அங்கிகளை உடுத்த விரும்புகிறார், இதனால் நாம் ஏசாயாவோடு சேர்ந்து இவ்விதமாகச் சொல்லலாம்:
"கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்." – ஏசாயா 61:10