வேதாகமத்தின் மிகப்பெரிய வெளிப்படுத்துதல்
ஒரே ஒரு வேதாகம வரலாற்று நிகழ்வை மட்டும் நேரில் பார்க்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்தால், அது எந்த நிகழ்வாக இருக்கும்?
என்னைப் பொறுத்தவரை, எந்தவொரு சந்தேகமுமின்றி அது நோவாவின் பேழையாகத்தான் இருக்கும். நான் விலங்குகளின் பிரியன் என்பதால் அல்ல, மாறாக அது வேதாகமத்தில் உள்ள மிகவும் வியக்கத்தக்க, ஒரு உலக அழிவின் காட்சியாக இருப்பதால் தான். உண்மையைச் சொல்வதானால், விலங்குகளை என் தட்டில்தான் பார்க்க எனக்குப் பிடிக்கும் 🫣.
நோவா நாளுக்கு நாள் மிகவும் பொல்லாததாகவும் ஊழல் நிறைந்ததாகவும் மாறிக்கொண்டிருந்த ஒரு சமுதாயத்தில் வாழ்ந்தார். ஒரு பெருவெள்ளத்தின் மூலம் மனிதகுலத்தைப் பூமியிலிருந்து முழுமையாக அழிப்பதே தேவனுடைய தீர்வாக இருந்தது. ஆனால் நோவா தேவனுடனே சஞ்சரித்துக்கொண்டிருந்தபடியால், அவரும் அவருடைய குடும்பத்தினரும் தேவனுடைய கண்களில் கிருபை பெற்றார்கள். வரவிருக்கும் பெருவெள்ளத்தைக் குறித்து தேவன் நோவாவை எச்சரித்து, ஒரு பேழையைச் செய்யும்படி அவரிடம் கூறுகிறார். நோவா அதற்குக் கீழ்ப்படிகிறார், காலம் வந்தபோது, அவரும், அவருடைய குடும்பத்தினரும் பேழைக்குள் கொண்டுவரப்பட்டனர், மற்றும் ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு பேழைக்குள் கொண்டுவரப்பட்டது. (ஆதியாகமம் 6 மற்றும் 7).
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?!? பூமி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, அந்தப் புயலின் நடுவே ஒரே ஒரு பிரம்மாண்டமான படகு மட்டுமே மிதக்கிறது, அதுவே ஒட்டுமொத்த விலங்கினங்களின் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உயிர்வாழ்வைத் தாங்கி நிற்கிறது.
நான் குறிப்பாக பார்க்க விரும்பும் தருணம் எதுவென்றால், ஒரு வருடத்திற்கும் மேலாகப் பேழையில் இருந்த பிறகு, அவர்கள் முதன்முறையாக அதன் கதவைத் திறந்து முற்றிலுமான ஒரு புதிய உலகத்தைக் காணும் அந்தத் தருணமே ஆகும். பழையவை அனைத்தும் ஒழிந்துபோயின, எல்லா மக்களும், எல்லா விலங்குகளும் இல்லாமல் போயினர். அவர்களுக்கு முன்பாக ஒரு புதிய தொடக்கம் காத்திருந்தது.
தெய்வீக வாக்குத்தத்தம் நமக்கும் இதே போன்ற ஒரு வாக்குத்தத்தத்தை அளிக்கிறது:
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.” – 2 கொரிந்தியர் 5:17-18
பெருவெள்ளத்திற்குப் பிறகு, இனி நமக்கு ஒருபோதும் சரீரப் பிரகாரமான பேழை தேவைப்படாது என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார் (ஆதியாகமம் 9:11).
ஆனால் ஆவிக்குரிய ரீதியில், நம் அனைவருக்கும் ஒரு பேழை தேவைப்படுகிறது: அவருடைய பெயர்தான் இயேசு. பேழையானது நோவாவை பழைய உலகத்திலிருந்து ஒரு புதிய உலகத்திற்குள் கொண்டு சேர்த்தது போலவே, கிறிஸ்துவின் மூலமாக நாம் நம்முடைய பழைய வாழ்க்கையைத் பின்னே விட்டுவிட்டு, முற்றிலும் ஒரு புதிய சிருஷ்டியாக மாறுகிறோம்.
நீங்கள் அது பேழையினுள் ஏறிவிட்டீர்கள் என்பதை உறுதிசெய்து கொண்டீர்களா?