நீங்கள் யாருக்காக ஜெபிக்கிறீர்கள்?
நீங்கள் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது, யாருக்காக ஜெபிக்கிறீர்கள்? உங்கள் கணவர் அல்லது மனைவிக்காகவா? உங்கள் பிள்ளைகளுக்காகவா? ஒருவேளை குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது இயேசுவை இன்னும் அறியாத உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்காகவா?
ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக நீங்கள் எப்போதாவது ஜெபிப்பதுண்டா? பிரதம மந்திரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் நகரத்தின் மேயர் அல்லது உள்ளூர் MLA-க்கள் போன்றவர்களுக்காக? அவர்கள் பெரிய பொறுப்புகளைச் சுமக்கிறார்கள், அதோடு நாள்தோறும் எண்ணற்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு நிச்சயமாக நம்முடைய ஜெபங்கள் தேவை.
ராணி எஸ்தர் தன் வாழ்க்கையிலேயே மிகப்பாரிய இக்கட்டான சூழ்நிலையையும், ராணியாக அவள் எதிர்கொள்ள வேண்டிய மிகக் கடினமான பணியையும் சந்தித்தபோது, தனக்காக ஜெபிக்கவும் உபவாசிக்கவும்படி தன் மக்களிடம் கேட்டுக்கொண்டாள். அவள் தன் உறவினரான மொர்தெகாயிடம் பின்வருமாறு கூறினாள்:
“நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.” – எஸ்தர் 4:16
நம்மை ஆளுகிற மக்களுக்காக ஜெபிக்கும்படியான ஒரு ஒத்த பணி நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1 தீமோத்தேயு 2:1-2வில் பவுல் நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறார்:
“நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்.”
தீர்க்கதரிசியான எஸ்றாவும் இதைப் போன்றே ஒன்றைக்கூறினார்:
“ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு” – எஸ்றா 6:10
தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அதிகாரத்தில் இருக்கும் மக்களுக்காக ஜெபிக்க இன்று ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். அவர்கள் தேவனுடைய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெறும்படியும், உத்தமத்தோடும் நீதியோடும் வழிநடத்தும்படியும், அவர்கள் தங்கள் இருதயங்களில் தேவனுடைய சமாதானத்தை அனுபவிக்கும்படியும் ஜெபியுங்கள்.
அதேவேளையில், நானும் உங்களுக்காக அவ்வாறே ஜெபிக்கிறேன்!