• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
    • VI Vietnamese
வெளியீட்டு தேதி 8 ஆகஸ்ட் 2026

ஆராதனையுடன் துவங்குங்கள்

வெளியீட்டு தேதி 8 ஆகஸ்ட் 2026

நாம் இன்னும் அப்போஸ்தலர் புத்தகத்தின் வழியாக, தினமும் ஒரு அதிகாரம் வீதம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம், அது இன்று நம்மை அப்போஸ்தலர் அதிகாரம் 13றிற்கு அழைத்துச் செல்கிறது. அங்கு அந்தியோகியாவில் எழும்பிய செழிப்பான சபையைப் பற்றி நாம் வாசிக்கிறோம்.

தீர்க்கதரிசிகளும் போதகர்களும் ஒன்றாக ஊழியஞ்செய்கிறார்கள். அவர்கள் உபவாசித்து கர்த்தரை ஆராதித்துக் கொண்டிருக்கும்போது, “பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர்திருவுளம்பற்றினார்.” (அப்போஸ்தலர் 13:2) சுவிசேஷ ஊழியம் இங்கே தொடங்குகிறது, திட்டமிடலால் அல்ல, ஆராதனையால் தொடங்குகிறது.

சபை பர்னபா மற்றும் சவுலின் மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பிவைக்கிறது. இதனுடன், வரலாற்றின் முதல் சுவிசேஷப் பயணம் தொடங்குகிறது. சீப்புருவிலும், பின்னர் பிசிதியாவிலும், இயேசுவைப் பற்றி அவர்கள் பிரசங்கிக்கிறார்கள். சிலர் சந்தோஷத்துடன் செவிகொடுக்கிறார்கள், மற்றவர்களோ பொறாமையுடனும் எதிர்ப்புடனும் எதிர்வினையாற்றுகிறார்கள்.

பவுல் ஒரு தீர்க்கமான வார்த்தையைக் கூறுகிறார்: “நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.” (அப்போஸ்தலர் 13:46). நற்செய்தியானது ஒரே ஒரு ஜனத்திற்கு மட்டும் வரம்பிற்குட்பட்டது அல்ல, மேலும் ஆபிரகாமுக்கு ஒரு காலத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட—அனைத்து தேசங்களுக்குமான ஆசீர்வாதம்—கண்ணுக்குத் தெரியும் வடிவத்தைப் பெறத் தொடங்குகிறது.

திருச்சபை ஒன்று கூடுவது மட்டுமன்றி, அனுப்பிவைக்கவும் செய்கிறது என்பதை அப்போஸ்தலர் 13 காட்டுகிறது. ஆவியானவர் அழைக்கிறார், சபை உறுதிப்படுத்துகிறது, மனிதர்கள் கீழ்ப்படிகிறார்கள். "சுவிசேஷ ஊழியம்" அல்லது "மிஷனரி ஊழியம்" என்ற வார்த்தையைக் கேட்கும்போது நீங்கள் தூரத்திலுள்ள தேசங்களைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் அதன் மையக்கருத்து என்னவென்றால், தேவன் உங்களை எங்கு வைத்தாலும் அவருடைய பணிக்குக் கீழ்ப்படிந்து இருப்பதே ஆகும்.

பிரசங்கிக்கவும், போதிக்கவும், ஞானஸ்நானம் கொடுக்கவும், சீஷராக்கவும், நோயாளிகளுக்காக ஜெபிக்கவும், பசியுள்ளவர்களுக்கு உணவளிக்கவும், ஏழைகளைப் பராமரிக்கவும் மற்றும் அந்நியரை உபசரிக்கவும் இயேசு நமக்குக் கொடுத்த ஊழியத்தைச் செய்ய நாம் அனைவரும் அந்நிய தேசங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியதில்லை (மத்தேயு 28:19-20 மற்றும் மத்தேயு 25:35-40).

நீங்கள் எங்கு இருந்தாலும் இன்றே தொடங்கலாம். கேள்வி என்னவென்றால்: நீங்கள் மனமுள்ளவர்களாயிருக்கிறீர்களா?

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.