முடிவுபரியந்தம் உண்மையாய் இருப்பது
மகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்துகள்!! 🇮🇳🇮🇳
ஏதோ ஒரு கெட்ட காரியம் நடக்கப்போகிறது என்றோ, அல்லது ஏதோ ஒன்று மாறப்போகிறது என்றோ நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
ஒருவேளை அப்போஸ்தலர் 20ல் பவுலுக்கு அப்படிதான் நடந்திருக்கும், ஏனென்றால் அவர் கூறுகிறார்:
"இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.." – அப்போஸ்தலர் 20:22-23
எனவே, அவர் ஒரு இறுதி உரைக்காக எபேசுவின் மூப்பர்களை வரவழைக்கிறார். பவுல் அவர்களோடு முழங்கால்படியிடுகிறார். அவர்கள் அவரைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, துக்கப்பட்டு, கண்ணீர் வடிக்கிறார்கள். முக்கியமாக இந்த ஒரு விஷயத்திற்காக: அவர்கள் இனி அவருடைய முகத்தைப் பார்க்க மாட்டார்கள் என்பது.
ஆனால் பவுல் அவர்களைப் பயத்தில் விட்டுச் செல்லவில்லை. மாறாக அவர்களை தேவனுக்குள்ளும், அவர்களைக் கட்டியெழுப்ப வல்லமையுள்ள தேவனுடைய கிருபையுள்ள வார்தைக்குள்ளும் ஒப்புவிக்கிறார். பவுல் அல்ல, தேவனே திருச்சபையைப் பாதுகாக்க வல்லவர்.
அவருடைய கடைசி ஞாபகம் வியப்பளிக்கிறது: அவர் யாருடைய வெள்ளியையோ வஸ்திரத்தையோ இச்சிக்கவில்லை. தன் சொந்தக் கைகளினாலே வேலை செய்தார். பின்னர் இயேசுவின் வார்த்தைகளை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்: “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.” (அப்போஸ்தலர் 20:35).
ஆவிக்குரிய தலைமைத்துவத்தின் மையக்கருத்தை இங்கே காண்கிறோம்: தன்னைத்தானே அர்ப்பணிக்கும் ஒரு வாழ்க்கை. உடைமைகள், பதவி அல்லது பாதுகாப்புக்காக ஏங்கும் வாழ்க்கை அல்ல, மாறாக அர்ப்பணிப்பு, தாராள குணம் மற்றும் நம்பிக்கை நிறைந்த ஒரு வாழ்க்கை.
அப்போஸ்தலர் 20 நம்மிடம் ஒரு ஆழமான கேள்வியை விட்டுச் செல்கிறது: இதுவே என் விடைபெறும் உரையாக இருந்தால், நான் எதையும் மறைத்து வைக்கவில்லை என்று உண்மையாகச் சொல்ல முடியுமா? எனது ஓட்டத்தைச் சந்தோஷத்தோடு ஓடி முடித்தேன் என்று என்னால் சொல்ல முடியுமா?
உங்கள் சொந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் மேலோங்கிய உணர்வு என்ன?
உங்கள் விடைபெறும் உரையைப் பற்றி நீங்கள் யோசித்தால், மனிதர்கள் எதை நினைவில் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்?