துன்பப்பட ஆயத்தமாய் இருப்பது
நான் முதன்முதலில் இந்தியாவுக்கு வந்தபோது, இந்தியா ஆபத்து இல்லாதது அல்ல என்பதை அறிந்திருந்தேன். உலகளவில் செய்தியாகி, இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய விவாதத்தைக் கிளப்பிய மிகவும் அதிர்ச்சியளிக்கும் நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு நான் இங்கு வந்தேன். பலர் என்னைச் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். ஒரு இளம் பெண்ணாக எனக்குப் பாதுகாப்பு இருக்காது என்று அவர்கள் நினைத்தார்கள். தேவன் என்னை அழைப்பதை உணர்ந்ததால் நான் மீண்டும் வந்தேன்.
பவுல் எருசலேமை நோக்கிப் பயணிக்கும்போது, அவர் பலமுறை எச்சரிக்கப்படுகிறார். தீர்க்கதரிசிகள் சிறைவாசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். நண்பர்கள் அவரைப் போகவேண்டாம் என்று கெஞ்சுகிறார்கள். ஆனால் பவுல் பதிலளிக்கிறார்:
“நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்.” – அப்போஸ்தலர் 21:13
அது அலட்சியம் அல்ல, மன உறுதி. பாதுகாப்பை விடக் கீழ்ப்படிதலே முக்கியம் என்று அவர் நம்புகிறார்.
எருசலேமில், பவுல் யூத மற்றும் புறஜாதி விசுவாசிகளுக்கு இடையே சுமுகமாக நடந்துகொள்கிறார். ஆயினும், கலக்கம் எழுகிறது. பொய் குற்றச்சாட்டுகள் வன்முறை கும்பலுக்கு வழிவகுக்கின்றன, பவுல் கைது செய்யப்படுகிறார்.
மீண்டும் ஒருமுறை, கதை தடம் புரள்வது போல் தோன்றுகிறது. ஆனால் உண்மையில், அது ரோமாபுரியை நோக்கி நகர்கிறது—சரியாக அப்போஸ்தலர் 1:8ல் இயேசு சொன்னது போல. சுவிசேஷம் பூமியின் கடைகோடி வரை செல்லும்.
கீழ்ப்படிதல் சில நேரங்களில் நீங்கள் போக விரும்பாத இடத்திற்கே உங்களை கொண்டு செல்லும். தேவன் தவறுவதால் அல்ல, நமது அமைதி மற்றும் தெளிவுக்கான விருப்பத்தை விட அவருடைய வழி மேன்மையானது என்பதால் ஆகும். அருகில் இருப்பவர்களுக்கு இழப்பாகத் தோன்றுவது தேவனுடைய கரத்தில் முன்னேற்றமாக மாறக்கூடும். தேங்கியிருப்பதுபோல் தோன்றுவது அவருடைய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பவுல் தன் விடுதலையை இழக்கிறார், ஆனால் சுவிசேஷம் தன் இடத்தை இழக்கவில்லை.
கீழ்ப்படிதல் என்பது இருட்டிற்குள் தாவுவது அல்ல —அது நம்பிக்கைக்குரிய தேவனுடைய கரங்களுக்குள் எடுத்து வைக்கும் ஒரு அடியாகும்.
கீழ்ப்படிதலுக்காக ஒரு விலையைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா?
ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவே, உம்முடைய வழிகளை எனக்குக் காண்பியும், உம்மைப் பின்பற்றும் ஒரு பிள்ளையைப் போல என்னை நடத்தும். தொடர்ந்து செல்ல எனக்குத் தைரியம் இல்லையென்றால், தயவுசெய்து என்னைத் தேற்றி மீண்டும் என்னை உற்சாகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.