ஏன் அவருடைய இரக்கங்கள் ஒரு வருடத்திற்கு நீடிப்பதில்லை
நாளின் முடிவில், இந்த நாளை எப்படித்தான் கடந்து வந்தோமோ என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
சில நேரங்களில் நான் அப்படி உணர்கிறேன், பின்னர் புலம்பல் 3:22-23-ஐ எனக்கு நானே நினைவூட்டிக்கொள்கிறேன்:
“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.”
தேவன் ஒவ்வொரு நாள் காலையிலும் நமக்கு புதிய இரக்கங்களைத் தருகிறார்!
இன்றைய பாரங்களுக்கு அதன் அர்த்தம் என்ன?
முதலாவதாக, ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து வரும் இந்த புதிய இரக்கங்களை நாம் பெற்றுக்கொள்வதால், ஒரு நாளைக் கடந்து வந்ததற்காக நாம் சோர்ந்துபோகக் கூடாது என்பதாகும். பல நாட்கள் நம்மை நாம் உடைந்துபோனவர்களாகவும் அடிபட்டவர்களாகவும் உணர வைக்கின்றன. அது பரவாயில்லை.
கடந்த நாளின் பாரங்களை இயேசுவின் மீது வையுங்கள் (1 பேதுரு 5:7). நம்மால் முடிந்ததை விட அவரால் அவற்றைச் சிறப்பாகக் கையாள முடியும். அந்த நாளுக்குப் போதுமான இரக்கம் கிடைத்தது. காலையில் இன்னும் அதிகமாக இருக்கும்.
இரண்டாவதாக, இன்றைய பாரங்களுக்கு நேற்றைய இரக்கங்களை நாம் சார்ந்திருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் தேவனுடைய இரக்கங்களை நாம் புதிதாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வசனம் “அவருடைய இரக்கங்கள் ஒவ்வொரு வருடமும் அல்லது ஒவ்வொரு மாதமும் புதியவைகள்” என்று கூறவில்லை. அது ‘காலைதோறும்’ என்று கூறுகிறது, ஏனென்றால் நம்மால் அவ்வளவுதான் தாங்க முடியும். தேவனால் எதிர்காலத்தையும் பின்னால் உள்ள விஷயங்கள் அனைத்தையும் பார்க்க முடியும், ஆனால் நாம் வரவிருக்கும் நாளைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும் என்றும், மீதமுள்ளவற்றை அவரிடம் நம்பி விட்டுவிட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் தேவனிடம் செல்லுங்கள், அவருடைய சமாதானம், அன்பு மற்றும் வழிநடத்துதலை தினமும் புதிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் அனுதின அதிசயத்தை வாசிப்பது இதற்கு ஒரு சிறந்த துவக்கம்!
தினசரி ஊக்கமளிக்கும் பரிசை வேறு யாருக்காவது கொடுக்க விரும்புகிறீர்களா? இந்தச் செய்தியை அவர்களுக்கு அனுப்புங்கள் (forward செய்யுங்கள்), ஏனென்றால் தேவனுடைய இரக்கங்கள் அவர்களுக்கும் ஒவ்வொரு நாளும் புதியவை என்பதை நினைவூட்ட இது ஒரு சிறந்த வழியாகும்!